25th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் ரூ. 19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
- பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்தார்.
- ரயில்வே, சாலை, எண்ணெய், எரிவாயு, நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி போன்ற பல முக்கிய துறைகளுடன் இந்த திட்டங்கள் தொடர்புடையவையாகும்.
- புதிய குர்ஜா – புதிய ரேவாரி இடையேயான 173 கிலோமீட்டர் நீளமுள்ள இரட்டை மின்மயமாக்கப்பட்ட பாதையை காணொலி காட்சி மூலம் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- கிரேட்டர் நொய்டாவில் ஒருங்கிணைந்த தொழில் நகரம் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இது உருவாக்கப்பட்டுள்ளது.
- சுமார் ரூ. 460 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானம் உட்பட புதுப்பிக்கப்பட்ட மதுரா கழிவுநீர் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
இந்திய கடற்படை நடத்திய 'சூப்பர்சோனிக் குரூஸ்' ஏவுகணை பரிசோதனை வெற்றி
- இந்திய கடற்படை மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இணைந்து உள்நாட்டில் தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனையை இன்று வெற்றிகரமாக மேற்கொண்டது.
- ஏவுகணை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கப்பல்களில் இருந்து இந்த சோதனையானது நடத்தப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படை, பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை சோதனையை சுகோய் போர் விமானத்தில் இருந்து மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் நிலக்கரி/பழுப்பு நிலக்கரி எரிவாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான திட்டத்திற்கு ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மூன்று பிரிவுகளின் கீழ் ஊக்கத்தொகை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- நிலக்கரியை வாயுவாக்கும் திட்டங்களுக்கு மூன்று வகைகளின் கீழ் மொத்தம் ரூ.8,500 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
- முதல் பிரிவில், அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ. 4,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 3 திட்டங்களுக்கு ஒட்டு மொத்த மானியமாக ரூ. 1,350 கோடி அல்லது மூலதனத்தில் 15 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.
- இரண்டாம் வகைப் பிரிவில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்களுக்கு ரூ.3,850 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒட்டுமொத்தமாக ரூ.1,000 கோடி அல்லது மூலதனத்தில் 15 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
- குறைந்தபட்சம் ஒரு திட்டமாவது கட்டண அடிப்படையிலான ஏல செயல்முறையில் ஏலம் விடப்படும், மேலும் அதன் அளவுகோல்கள் நிதித் ஆயோக்குடன் கலந்தாலோசித்து வடிவமைக்கப்படும்.
- மூன்றாவது வகைப் பிரிவில், செயல்விளக்கத் திட்டங்கள் (உள்நாட்டு தொழில்நுட்பம்) அல்லது சிறிய அளவிலான உற்பத்தி அடிப்படையிலான எரிவாயுவாக்கும் ஆலைகளுக்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் குறைந்தபட்சம் ரூ.100 கோடி மூலதன செலவு, மூலதனத்தில் 15 சதவீதம், இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.
- வகை II மற்றும் III இன் கீழ் நிறுவனங்களின் தேர்வு போட்டி மற்றும் வெளிப்படையான ஏல செயல்முறை மூலம் மேற்கொள்ளப்படும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்திற்கு மானியம் இரண்டு சமமான தவணைகளில் வழங்கப்படும்.
- ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ.8,500 கோடிக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு, நிலக்கரித் துறை செயலர் தலைமையிலான மின் அலுவலகங்கள், இத்திட்டத்தின் வழிமுறைகளில் தேவைப்படும் எந்த மாற்றங்களையும் செய்ய முழு அதிகாரம் அளிக்கப்படும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஓமன் நாட்டின் போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே 2023 டிசம்பர் 15 அன்று தகவல் தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- பரஸ்பர ஆதரவு, தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில்நுட்பங்கள், தகவல் மற்றும் முதலீடுகள் மூலம் இருதரப்பினருக்கும் இடையே விரிவான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இருதரப்பினரும் கையெழுத்திட்ட நாளிலிருந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலுக்கு வருவதுடன், 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
- தகவல் தொழில்நுட்பத் துறையில் ஜி2ஜி மற்றும் பி2பி இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.
- தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு முயற்சி மூலம் இசிஎல் கட்டுப்பாட்டு பகுதியில் நிலக்கரியிலிருந்து செயற்கையான இயற்கை எரிவாயு திட்டத்தை அமைப்பதற்கான கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு முதலீட்டிற்கான முன்மொழிவு, கோல் இந்தியா & பெல் நிறுவனத்தின் கூட்டு முயற்சி மூலம் எம்சிஎல் கட்டுப்பாட்டு பகுதியில் நிலக்கரியிலிருந்து அம்மோனியம் நைட்ரேட் திட்டத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ.1,997.08 கோடி கடன்-சமபங்கு விகிதம் 70:30 என்ற விகிதத்தைக் கருத்தில் கொண்டு, மற்றும் ரூ.13,052.81 கோடி திட்ட மூலதன செலவு மதிப்பீட்டுடன் கூட்டு முயற்சி நிறுவனத்தில் 51% பங்கு முதலீடு மேற்கு வங்கத்தின் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் சோன்பூர் பஜாரி பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள நிலக்கரியிலிருந்து செயற்கையான இயற்கை எரிவாயு திட்டம் மூலதன செலவு மூலம் கோல் இந்தியா நிறுவனம் மற்றும் கெயில் நிறுவனத்தின் கூட்டு முயற்சி மூலம் மேற்கொள்ளப்படும்.