20th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
100 புதிய பிஎஸ்4 பேருந்துகள் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் ஸ்டாலின்
- முதல்வர் ஸ்டாலின் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாகவும், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
- மேலும், 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
- அதுமட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திற்கென மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- அந்த அறிவிப்புகளின்படி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களில் புதிய பேருந்துகளை இயக்கிடும் வகையிலும். 634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 1666 பிஎஸ்4 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- அதன் முதற்கட்டமாக. விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 40 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 40 புதிய பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 10 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 5 புதிய பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 5 புதிய பேருந்துகளும், என மொத்தம் 100 புதிய பிஎஸ்4 பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங், புது தில்லியில் மின் துறையின் ஆய்வு திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு (RPM) கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
- இந்த கூட்டத்தில் இந்திய அரசின் செயலாளர் (மின்சாரம்) மற்றும் செயலாளர் (MNRE) ஆகியோருடன், பல்வேறு மாநிலங்களில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், செயலாளர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள் (மின்சாரம் / எரிசக்தி) மற்றும் மாநில மின்பயன்பாடுகளின் சிஎம்டிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- இந்த நிகழ்வின் போது, 2022-23 நிதியாண்டிற்கான டிஸ்காம்களின் செயல்திறனை உள்ளடக்கிய டிஸ்காம்களின் நுகர்வோர் சேவை மதிப்பீடுகளின் மூன்றாவது பதிப்பை அமைச்சர் சிங் தொடங்கி வைத்தார்.
- NPCL (உத்தர பிரதேசம்), BRPL (டெல்லி), BYPL (டெல்லி), மற்றும் TPDDL (டெல்லி) ஆகியவை நாட்டிலுள்ள 62 ரேட்டிங் பெற்ற டிஸ்காம்களில் மிக உயர்ந்த A+ தரவரிசையைப் பெற்றுள்ளன.
- பவர் டிஸ்காம்களுக்கான புதுமையான தீர்வுகளைக் கொண்ட ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்முனைவோர் ஒரு இன்குபேஷன் திட்டத்தில் பங்கேற்க உதவும் முயற்சியான Powerthon 2024 ஐயும் அமைச்சர் வெளியிட்டார்.
- நிறுவப்பட்ட உள்நாட்டு இன்குபேட்டர்களால் எளிதாக்கப்பட்ட இந்தத் திட்டம், முன்மாதிரிகளின் வளர்ச்சிக்கான வழிகாட்டுதல், வளங்கள் மற்றும் வளர்ப்பு ஆகியவற்றை வழங்குகிறது.
- கூடுதலாக, மத்திய மின்சார ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்சார விநியோக வலையமைப்பு திட்டமிடல் அளவுகோல், ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் உட்பட துணை பரிமாற்றம் மற்றும் விநியோக மட்டத்தில் விநியோக திட்டமிடல் செயல்முறைகளின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது.
- பங்குதாரர்களிடம் உரையாற்றிய அமைச்சர் சிங், மின் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஒப்புக்கொண்டார், 2015-16 ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் சராசரி தினசரி மின்சாரம் ஒரு நாளைக்கு 12.5 மணி நேரத்திலிருந்து ~ 21 மணிநேரமாகவும் நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு 23.8 மணிநேரமாகவும் முன்னேற்றம் கண்டுள்ளது.
- மீண்டும் பயன் பெறக்கூடிய வகையில் துருப்பிடிக்காத எக்கு திரவ ராக்கெட்டை சீனா வடிவமைத்து அதற்கு “ஸுக்யூ-3” என்று பெயரிட்டிருந்தது. இந்நிலையில் “ஸுக்யூ-3யின் சோதனை வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
- செங்குத்தாக ஏவப்பட்ட விண்கலத்தின் அடிப்பாகம் செங்குத்தான நிலையிலேயே வெற்றிகரமாக தரையிறங்கியது. 4.5 மீட்டர் விட்டம் கொண்ட “ஸுக்யூ-3” விண்கலம் திரவ ஆக்சிஜன் மற்றும் மீத்தேனை உந்து சக்தியாக பயன்படுத்துகிறது.
- இந்த ராக்கெட் குறைந்தது 20 முறை மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தும் ராக்கெட்டுகளை ஒப்பிடும் போது விண்கலத்திற்கான செலவினம் சுமார் 80 முதல் 90 சதவீதம் வரை குறையும் என்கிறார்கள் சீன விண்வெளி நிபுணர்கள்