Type Here to Get Search Results !

16th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

16th JANUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

9 ஆண்டுகளில் வறுமைக் கோட்டில் இருந்து வெளியேறிய 24.82 கோடி மக்கள் - நிதி ஆயோக் அறிக்கை

  • NITI ஆயோக் விவாத கட்டுரையின்படி, இந்தியாவில் பல பரிமாணங்களில் வறுமையானது 2013-14 இல் 29.17% இல் இருந்து 2022-23 இல் 11.28% ஆகக் குறைந்துள்ளது. 
  • இந்த காலகட்டத்தில் சுமார் 24.82 கோடி மக்கள் வறுமை கோட்டிலிருந்து வெளியேறி உள்ளனர். தேசிய பரிமாண வறுமையானது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று முக்கியமான பிரிவுகளை கொண்டு இயங்குகிறது.
  • அவை 12 நிலையான வளர்ச்சி இலக்குகள்-சீரமைக்கப்பட்ட குறிகாட்டிகளால் குறிப்பிடப்படுகின்றன. ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, தாய்வழி ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு ஆண்டுகள், பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவை இதில் அடங்கும். 
  • நிதி ஆயோக்கின் தேசிய பரிமாண வறுமைக் குறியீடு (MPI) வறுமை விகிதங்களில் குறைவை மதிப்பிடுவதற்கு அல்கிர் ஃடர் முறையைப் பயன்படுத்துகிறது. 
  • இருப்பினும், தேசிய MPI 12 குறிகாட்டிகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் உலகளாவிய MPI 10 குறிகாட்டிகளை உள்ளடக்கியது. உத்தரப்பிரதேசத்தில், மாநில அளவில், 5.94 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியேறி முதலிடத்தில் உள்ளது. 
  • அதனை தொடர்ந்து பீகாரில் 3.77 கோடி பேரும், மத்தியப் பிரதேசத்தில் 2.30 கோடி பேரும் வறுமை நிலையில் இருந்து முன்னேறி உள்ளனர். 

ஊரக மின்மய நிறுவனம் (ஆர்.இ.சி) 61.1 பில்லியன் ஜப்பானிய யென் மதிப்பிலான பசுமைப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது
  • மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஊரக மின்மய நிறுவனம் (ஆர்.இ.சி) 61.1 பில்லியன் ஜப்பானிய யென் (ஜே.பி.ஒய்) மதிப்பிலான 5 ஆண்டு, 5.25 ஆண்டு மற்றும் 10 ஆண்டுக்கான, அதன் முதலாவது பசுமைப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. 
  • பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம், இந்நிறுவனத்தின் பசுமை நிதிக் கட்டமைப்பு, ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டு வணிகக் கடன் வழிகாட்டுதல்கள் மற்றும் அவ்வப்போது வழங்கப்படும் ஒப்புதல்களுக்கு இணங்க தகுதிவாய்ந்த பசுமைத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும்.
  • பரிவர்த்தனையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு
  • சர்வதேசப் பத்திர சந்தையில் ஆர்.இ.சி நிறுவனத்தின் பதினோராவது முயற்சி மற்றும் தொடக்க யென் பத்திர வெளியீடு, இது இந்திய பொதுத்துறை நிறுவனம் வெளியிடும் முதலாவது யென் பசுமைப் பத்திரம் ஆகும்.
  • 5 ஆண்டு, 5.25 ஆண்டு மற்றும் 10 ஆண்டு பத்திரங்கள் முறையே 1.76%, 1.79% மற்றும் 2.20% லாபத்தில் வெளியிடப்படுகின்றன. 
  • தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய யூரோ-யென் வெளியீடு
  • இந்தியாவிலிருந்து மிகப் பெரிய யென்-குறியீட்டு வெளியீடு
  • தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து இதுவரை இல்லாத மிகப்பெரிய யென்-குறியீட்டு வெளியீடு
  • இந்தப் பரிவர்த்தனை ஜப்பானிய மற்றும் சர்வதேச கணக்குகள் இரண்டிலிருந்தும் ஆர்வத்தைக் கண்டது, ஒவ்வொன்றிலிருந்தும் ஆர்டர்களின் எண்ணிக்கை 50% ஆக இருந்தது, சர்வதேச ஒதுக்கீடு வேறு எந்த இந்திய யென் ஒப்பந்தத்திற்கும் மிக உயர்ந்த ஒன்றாகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, தேசிய மனிதவள மேம்பாட்டுக் கட்டமைப்பு ஒப்பந்தம்

  • கோவாவில் நடைபெற்ற சர்வதேச ஊதா விழாவின் நிறைவு நாளில், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, தேசிய மனிதவள மேம்பாட்டுக் கட்டமைப்பு ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 
  • இந்த ஒத்துழைப்பு, பிஎம்-தக்ஷ்த் எனும் பிரதமரின் ஆற்றல் மற்றும் திறன் பயனாளி -மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தல் துறை இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இத்துறையின் மக்கள் தொடர்பை விரிவுபடுத்துவதற்கும், நாடு தழுவிய அளவில் மனிதவள நிபுணர்களுடனான தொடர்புகளை வளர்ப்பதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். 
  • மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வேலை வாய்ப்புகளை எளிதாக்குவதற்கான முயற்சிகளை அதிகரிப்பதும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பலவகைத் தொழிலாளர்களை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel