28th DECEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கொலீஜியம் அமைப்பில் புதிய நீதிபதி நியமனம்
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட கொலீஜியம் அமைப்பு பரிந்துரையின் பேரில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி நியமனம் செய்கிறார்.
- இவ்வமைப்பில் இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கடந்த சில தினங்களுக்கு முன் பணி நிறைவு பெற்றார். இதையடுத்து காலியாக உள்ள பதவிக்கு நீதிபதி அனிருத்தா போஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டு கொலீஜியம் அமைப்பில் நியமிக்கப்பட்டார்.
- இவர் 2024 ஏப்ரல் 10-ம் தேதிவரை பதவியில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தில் நீதிபதிகள் சஞ்சீப் கண்ணா, பி.ஆர்.காவி, சூரியகாந்த், அனிருத்தா போஸ் என 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
- ஃபட்டா-2 ஏவுகணைத் தளவாடத்தின் சோதனை புதன்கிழமை நடைபெற்றது. அதில் அந்த ஏவுகணைகள் வெற்றிகரமாக செயல்பட்டன.
- அதிநவீன மின்னணு சாதனங்களும், உயா்திறன் கொண்ட வழிகாட்டு கருவிகளும் அந்த ஏவுகணைத் தளவாடத்தில் பொருத்தப்பட்டுள்ளன.400 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை இந்த ஏவுகணைகள் மிகவும் துல்லியமாகத் தாக்கக் கூடியவை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானின் முப்படைகளையும் சோந்த அதிகாரிகள் இந்த ஏவுகணை சோதனையை நேரில் பாா்வையிட்டனா். ஏற்கெனவே, தனது கோரி ஏவுகணை தளவாடத்தை கடந்த அக்டோபா் மாதம் பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்தது நினைவுகூரத்தக்கது.
- தற்போது சோதித்துப் பாா்க்கப்பட்டுள்ள ஃபட்டா-2 தளவாடத்தின் முன்னோடியான ஃபட்டா-1 ஏவுகணைத் தளவாடம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் முதல்முறையாக சோதிக்கப்பட்டது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 134.913 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை 208-இன் கோவாய் முதல் ஹரினா வரையிலான சாலையை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.
- இத்திட்டம் ரூ.2,486.78 கோடி முதலீட்டை உள்ளடக்கியது, இதில் ரூ.1,511.70 கோடி கடனாகும். அதிகாரபூர்வ மேம்பாட்டு உதவி திட்டத்தின் கீழ் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையிலிருந்து கடன் பெறப்படும்.
- திரிபுராவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே சிறந்த சாலை இணைப்பை எளிதாக்குவதற்கும், தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை 8 தவிர திரிபுராவிலிருந்து அசாம் மற்றும் மேகாலயாவுக்கு மாற்று அணுகலை வழங்குவதற்கும் இந்தத் திட்டம் உதவும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கங்கை ஆற்றின் குறுக்கே (தற்போதுள்ள திகா-சோனேபூர் ரயில்-சாலைப் பாலத்தின் மேற்குப் பகுதிக்கு இணையாக) புதிதாக 4,556 மீட்டர் நீளமுள்ள, 6 வழி உயர்மட்ட / கூடுதல் அளவு கேபிள் பாலம் கட்டுவதற்கும், பீகார் மாநிலத்தில் பாட்னா மற்றும் சரண் (என்.எச்-139 டபிள்யூ) மாவட்டங்களில் இருபுறமும் அதன் அணுகு பாதைகளை அமைப்பதற்கும் ஒப்புதல் அளித்தது.
- இத்திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.3,064.45 கோடியாகும், இதில் ரூ.2,233.81 கோடி சிவில் கட்டுமான செலவும் அடங்கும்.
- இந்தப் பாலம் போக்குவரத்தை விரைவாகவும் எளிதாகவும் மாற்றுவதுடன், மாநிலத்தின், குறிப்பாக வடக்கு பீகாரில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படும்.
- திகா (பாட்னா மற்றும் கங்கை ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது) மற்றும் சோனேபூர் (சரண் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் வடக்கு கரை) ஆகியவை தற்போது இலகுரக வாகனங்களின் இயக்கத்திற்காக ரயில் மற்றும் சாலை பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளன.
- எனவே, தற்போதைய சாலையை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது ஒரு பெரிய பொருளாதார தடையாகும். திகா மற்றும் சோனேபூருக்கு இடையில் இந்தப் பாலத்தைக் கட்டுவதன் மூலம் இந்தத் தடை நீக்கப்படும். இதன் மூலம் பிராந்தியத்தின் பொருளாதாரத் திறன் உயரும்.