26th NOVEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இயற்கை எரிவாயுவுடன் அழுத்தப்பட்ட உயிர்வாயு கலப்பு கட்டாயம் - ஒன்றிய அரசு
- வரும் 2025 ஏப்ரல் முதல் ஆட்டோ மொபைல் வாகனங்கள், வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவில் உயிர் வாயு முதலில் 1 சதவீதம் கலக்கப்படும்.
- அதன் பின்னர் 2028ம் ஆண்டுக்குள் அது 5 சதவீதமாக அதிகரிக்கப்படும். உலகின் மிக பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியாளர்களில் ஒன்றான இந்தியா ஒட்டுமொத்த எரிவாயு நுகர்வில் பாதியை ஏற்றுமதி செய்து அதன் இறக்குமதி செலவை குறைக்க விரும்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
- இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
- இந்நிலையில், பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு நேற்று சென்றார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.
- இந்திய கடலோரக் காவல்படையால் 25 நவம்பர் 2023 அன்று குஜராத்தின் வாடினாரில் 9வதுதேசிய அளவிலான மாசு தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
- இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் டிஜி ராகேஷ் பால் மற்றும் தலைவர் என்ஓஎஸ்டிசிபி ஆகியோர் பயிற்சியின் போது அனைத்து முகமைகளின் தயார்நிலையை ஆய்வு செய்தனர்.
- மத்திய மற்றும் கடலோர மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள், துறைமுகங்கள், எண்ணெய் கையாளும் முகமைகள் மற்றும் பிற பங்குதாரர்களின் பிரதிநிதிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர். 31-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பார்வையாளர்கள், 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.
- தேசிய எண்ணெய் கசிவு பேரழிவு தற்செயல் திட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி கடலில் எண்ணெய் கசிவைச் சமாளிக்க பல்வேறு வள முகமைகளுக்கு இடையிலான தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பின் அளவைச் சோதிக்கும் அதன் நோக்கத்தை இந்தப் பயிற்சி நிறைவேற்றியது