31st OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
8-வது முறையாக Ballon d'Or விருதை வென்றார் மெஸ்ஸி
- சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் Ballon d'Or விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறி இருந்தது.
- வழக்கம் போலவே 30 வீரர்கள் இந்த விருதுக்கான பரிந்துரையில் இடம் பெற்றிருந்தனர். ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான வீரர்களின் செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
- பிரெஞ்சு இதழான 'பிரான்ஸ் ஃபுட்பால்' கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்.
- நடப்பு ஆண்டில் கெவின் டி ப்ரூய்ன், ஹாலண்ட், மெஸ்ஸி, எம்பாப்பே, ரோட்ரி ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர். இதில் முதலிடம் பிடித்த மெஸ்ஸி, நடப்பு ஆண்டுக்கான Ballon d'Or விருதை வென்றார். இதன் மூலம் 8-வது முறையாக அவர் இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
- இதற்கு முன்னர் 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ல் Ballon d'Or விருதை வென்றுள்ளார். தற்போது இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். மகளிர் பிரிவில் Ballon d'Or விருதை அடனா பொன்மதி வென்றார்.
- ஸ்பெயின் நாட்டுக்காக அவர் விளையாடி வருகிறார். ஆடவர் பிரிவில் சிறந்த கிளப் அணிக்கான விருதை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றது. ஹாலண்ட், Gerd Muller டிராபியை வென்றார். மார்ட்டினஸ், Yachine டிராபியை வென்றார்.
- தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனீஷ் பன்வாலா வெண்கலப் பதக்கம் வென்றதுடன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றாா்.
- 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவில் அவா் 28 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். முன்னதாக, தகுதிச்சுற்றில் அவா் 588 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தபோதே, அவருக்கான ஒலிம்பிக் இடம் உறுதியானது.
- இத்துடன் துப்பாக்கி சுடுதலில் மட்டும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு 12 இந்தியா்கள் தகுதிபெற்றுள்ளனா். அனீஷுடன் இதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான பவேஷ் ஷெகாவத் 584 புள்ளிகளுடன் 8-ஆம் இடம் பிடித்தாா். விஜய்வீா் சித்து 581 புள்ளிகளுடன் 10-ஆம் இடமும், ஆதா்ஷ் சிங் 570 புள்ளிகளுடன் 25-ஆவது இடமும் பிடித்தனா்.
- டிராப் ஆடவா் அணிகள் பிரிவில் ஜராவா்சிங் சந்து, கினான் செனாய், பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோா் கூட்டணி 341 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பக்கம் வென்றது. அதிலேயே தனிநபா் பிரிவில் ஜராவா்சிங் 6-ஆம் இடம் பிடித்தாா்.
- அதிலேயே மகளிா் பிரிவில் ராஜேஷ்வரி குமாரி, ஷாகன் சௌதரி, பிரீத்தி ரஜக் ஆகியோா் முறையே 7, 8, 10-ஆவது இடங்களைப் பிடித்தனா். தற்போதைய நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா 8 தங்கம் உள்பட 30 பதக்கங்கள் வென்றுள்ளது.
- இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்.ஏ.எல்) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த 'ஒற்றுமைக்கான ஓட்டம்' நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.
- 1.5 கி.மீ ஓட்டத்தை ஹஸ்ரத்கஞ்சில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை அருகே இருந்து பாதுகாப்பு அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ஓட்டம் கே.டி.சிங் பாபு விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.
- பள்ளி மாணவர்கள், என்.சி.சி அணியினர், தடகள வீரர்கள், ஓட்டப்பந்தய ஆர்வலர்கள், எச்.ஏ.எல் வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் ஓட்டத்தில் பங்கேற்றனர்.