Type Here to Get Search Results !

22nd OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


22nd OCTOBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஷீரடி விமான நிலைய புதிய முனையம் - ரூ.1,200 கோடி ஒப்புதல்
  • ஷீரடி விமான நிலைய மற்றொரு முனையத்தின் நிலுவையில் உள்ள பணிகளை மேற்கொள்ள மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.1,200 கோடியை ஒதுக்கீடு செய்த தீர்மானத்தை மகாராஷ்டிர அரசு சனிக்கிழமை வெளியிட்டது.
  • முந்தைய பணிகளுக்காக ரூ.364 கோடியும், மற்றொரு முனையத்தின் மேம்பாட்டு பணிகள் மற்றும் ஷீரடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.876 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • இந்த தீர்மானத்தை மாநில தலைமைச் செயலாளர் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்திற்கு முதல்வர் மற்றும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • ஷீரடி விமான நிலையமானது தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் திருப்பதி போன்ற அனைத்து முக்கிய நகரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்துக்கு ஒவ்வொரு மாதமும் 64,000 பயணிகள் வந்து செல்கின்றனர். 
  • இங்கு வரும் பயணிகள் பெரும்பாலானவர்கள் சாய்பாபா பக்தர்கள் ஆவர். மேலும், இந்த விமான நிலையத்தில்  விவசாய மற்றும் ஏனைய பொருள்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் நடைபெறுகிறது.
  • விமான நிலையத்தை ஒட்டிய பகுதிகளை அழகுபடுத்துதல், நுழைவு வாயில் அமைத்தல், ஓடுபாதை புனரமைப்பு, விமான நிலையத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் மற்றும் பயிற்சி மையம் தவிர, பாதுகாப்புப் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு இந்த தொகை செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • புதிய முனையம் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும். இதில் அனைத்து நவீன வசதிகளும் இருக்கும். தரைதளத்தில் சோதனை கூடம், பயணிகள் சோதனை பகுதி, தொலைதூரத்தில் இருந்து கண்காணிக்கும்  வசதி மற்றும் பொருள்களை கையாளும் அமைப்பு போன்ற வசதிகள் அமைக்கப்படும்.
என்.எல்.சி இந்தியா லிமிடெட் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பசுமை பிரிவு வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது
  • நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா லிமிடெட், அனைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்முயற்சிகளையும் மேற்கொள்வதில் குறிப்பாக கவனம் செலுத்தி வருகிறது. என்.எல்.சி இந்தியா கிரீன் எனர்ஜி லிமிடெட் (என்.எல்.சி.இ.எல்) என்ற துணை நிறுவனத்தை அது இணைத்துள்ளது.
  • நிறுவனத்தின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், நிறுவனத்தின் லோகோவை ஏற்றுக்கொண்டதுடன் முக்கிய நிர்வாக பதவிகளின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. 
  • இந்நிறுவனத்தின் லோகோவை வெளியிட்ட நைஜெல் நிறுவனத்தின் தலைவர் திரு. பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் கவனம் செலுத்தும் புதிய நிறுவனம் ஆர்இ மின் உற்பத்தி திறனை வேகமாக அதிகரிக்க உதவும் என்றார். 
  • தொழில்துறை காலநிலை மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருப்பதால், பம்ப் செய்யப்பட்ட ஹைட்ரோ சிஸ்டம் மற்றும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு போன்றவை ஆர்.இ.யின் வளர்ச்சி ஒரே நேரத்தில் நடக்கும்.
  • மின்சார அமைச்சகத்தின் உகந்த எரிசக்தி கலவை அறிக்கை 2030 இன் படி, மின் கட்டமைப்பில் திட்டமிடப்பட்டுள்ள பி.இ.எஸ்.எஸ் சுமார் 41.65 ஜிகாவாட் ஆகும், இது சேமிப்பு அமைப்பு மேம்பாட்டிற்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
  • இந்த துணை நிறுவனம் 2030 ஆம் ஆண்டிற்குள் 6 ஜிகாவாட் திறன் கொண்ட ஆர்இ திட்டங்களை நிறுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2 ஜிகாவாட் திறன் கொண்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel