Type Here to Get Search Results !

6th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


6th SEPTEMBER 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (பி.இ.எஸ்.எஸ்) மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதி என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • மாண்புமிகு பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • 2030-31 ஆம் ஆண்டிற்குள் 4,000 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புத் திட்டங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • மூலதன செலவில் 40% வரை வரவுசெலவுத் திட்ட உதவியாக சாத்தியக்கூறு இடைவெளி நிதி வடிவத்தில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை பேட்டரி சேமிப்பு அமைப்புகளின் செலவைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் திறனைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம் குடிமக்களுக்கு சுத்தமான, நம்பகமான மற்றும் மலிவு விலையில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • ரூ.9,400 கோடி தொடக்க ஒதுக்கீட்டில், ரூ.3,760 கோடி வரவுசெலவுத் திட்ட ஆதரவு உள்பட, பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புத் திட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதித்திட்டம், நிலையான எரிசக்தி தீர்வுகளுக்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. 
  • இதன் மூலம் ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு ரூ.5.50 - 6.60 வரை சமநிலைப்படுத்தப்பட்ட சேமிப்பு செலவை அடைவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம், 2017 இன் கீழ் கூடுதல் நிதித் தேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கான தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம் 2017-க்கு ரூ.1164.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கான தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம், 2017-ஐ 2018 ஏப்ரல் 23, 2018 தேதியிட்ட அறிவிக்கை எண் 2 (2) / 2018-எஸ்பிஎஸ் மூலம் மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.131.90 கோடியாகும். 
  • ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 2021-22 நிதியாண்டில் செலவழிக்கப்பட்டது. மேலும், 2028-2029 ஆம் ஆண்டு வரை உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற கூடுதல் நிதித் தேவை ரூ.1,164.53 கோடியாகும். 
  • இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை ஒதுக்க, தொழில் வளர்ச்சித் திட்டம், 2017ன் கீழ், அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்பட்டது.
புதுதில்லியில் கிரிட் இணைப்புகள் பற்றிய மாநாடு நடைபெற்றது
  • 18வது ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, "ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மிந்தொடர் கட்டமைப்பு (OSOWOG) என்பதற்கான நாடுகடந்த கிரிட் இணைப்பு" என்ற தலைப்பில் ஒரு நாள் மாநாடு இன்று புது தில்லியில் நடைபெற்றது. 
  • மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள 'மஹாரத்னா' நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் (POWERGRID) மூலம் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel