9th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கீழடி அகழாய்வில் சுடுமண் பாம்பு தலை கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. 9வது குழியில் நடந்த அகழாய்வில் 8 கிராம் எடையில், 1.5 செ.மீ உயரம் கொண்ட ஸ்படிக எடைக்கல்லை கண்டெடுத்தனர்.
- இதுவரை கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பானை ஓடுகளை வகைப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப்பகுதி உடைந்த நிலையில் கிடைத்தது.
- ''சுடுமண் பாம்பின் கண்கள், வாய்ப்பகுதி மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. இது 6.5 செமீ நீளம், 5.4 செமீ அகலம் 1.5 செமீ தடிமண் கொண்டதாக உள்ளது''.
- மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான, ககன்யான் திட்டத்தின்படி மனிதனை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில், நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகேயுள்ள மகேந்திரகிரியில், இஸ்ரோ மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், பல்வேறு கட்டங்களில் சோதனை நடந்து வந்தது.
- 2024ம் ஆண்டு ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்கான ககன்யான் ராக்கெட் திட்டத்தின், 2ஜி விகாஷ் இன்ஜின் சோதனை பணகுடி மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில், 670 வினாடிகள் தொடர்ந்து நடந்து வெற்றி பெற்றது.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் கொண்டுவந்தார்.
- தீர்மானத்தை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து அவர் பேசியதாவது: மலையாளத்தில் 'கேரளம்' என்ற பெயரிலும், பிற மொழிகளில் 'கேரளா' என்ற பெயரிலும் நமது மாநிலம் அழைக்கப்படுகிறது.
- ஆனால், நமது மாநிலத்தின் பெயர் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையில் 'கேரளா' என்றே எழுதப்பட்டுள்ளது. எனவே, அரசியலமைப்பின் 3-வது பிரிவின்கீழ் இதை 'கேரளம்' என்று திருத்தம் செய்து உடனடி பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
- அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.