Type Here to Get Search Results !

6th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


6th AUGUST 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டி - பிரனோய் 2ம் இடம்
  • ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரனோய் தோல்வி கண்டு வெளியேறினார்.
  • ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பாட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரனோய் 9-21, 23-21, 20-22 என்ற கணக்கில் சீன வீரர் வெங் ஹாங் யாங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
நாடு முழுவதும் ரூ.24,470 கோடியில் 508 ரயில் நிலையங்களை புதுப்பிக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
  • அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். 
  • இதில் தமிழகத்தில் அரக்கோணம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, ஜோலார்பேட்டை, கரூர், மயிலாடுதுறை, நாகர்கோவில், பெரம்பூர், போத்தனூர், சேலம், தென்காசி, தஞ்சாவூர், திருப்பூர், திருத்தணி, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 18 ரயில்நிலையங்கள் ரூ.515 கோடியில் புதுப்பிக்கப்படுகின்றன.
சென்னை கிண்டி ராஜ்பவன் தர்பார் ஹால் பெயர் மாற்றம்
  • கிண்டி ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலுக்கு மகாகவி பாரதியார் மண்டபம் என்று புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார். 
  • தொடர்ந்து மகாகவி பாரதியாரின் திருவுருவப் படத்தையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பலூர் எம்.பி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஐஐடி மெட்ராஸ் இணைந்து 'ரிஸ்க் ஃபைவ் (RISC-V) வழியில் இந்தியாவின் மின்னணுவியல் எதிர்காலம்' என்ற தலைப்பில் டிஜிட்டல் இந்தியா கருத்தரங்கை நடத்தியது
  • ரிஸ்க் ஃபைவ் (RISC-V) வழியில் இந்தியாவின் மின்னணுவியல் எதிர்காலம்' என்பதை விளக்கும் வகையில் 'டிஜிட்டல் இந்தியா RISC-V' என்ற ஒருநாள் கருத்தரங்கு சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி மெட்ராஸ்) இன்று (6 ஆகஸ்ட் 2023) நடைபெற்றது.
  • மதிப்பிற்குரிய கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்களின் நுண்ணறிவுமிக்க தொழில்நுட்ப உரைகள், உள்நாட்டுத் தயாரிப்பான ரிஸ்க்-ஃபைவ் பிராசசர்களின் விற்பனைக் காட்சியகம், கலந்துரையாடல், சிறப்பு முதலீட்டாளர் சந்திப்பு போன்றவை இக்கருத்தரங்கில் இடம்பெற்றிருந்தன.
  • இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஐஐடி மெட்ராஸ், ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன. 
  • காணொலி வாயிலாக மத்திய மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு. ராஜீவ் சந்திரசேகர் இதில் பங்கேற்றார். 
  • ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி ஆகியோருடன் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
  • தன்னிறைவு லட்சியத்துடன் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முன்னேற்றங்களை அடைய உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 
  • அதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் இந்தியா ரிஸ்க் ஃபைவ் (RISC-V) மைக்ரோபிராசசர் (DIR-V) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எதிர்கால இந்தியாவிற்கும், உலகிற்கும் பயனளிக்கும் மைக்ரோ பிராசசர்களை டிசம்பர் 2023-க்குள் உருவாக்கி தொழில்ரீதியாக சிலிக்கான் மற்றும் வடிவமைப்பில் வெற்றிபெறுவது இத்திட்டத்தின் இலக்காகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel