12th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உடாய் அமைப்பின் சி.இ.ஓ.வாக அமித் அகர்வால் நியமனம், தேசிய தேர்வு முகமை இயக்குனரானார் சுபோத் குமார்
- உடாய் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமித் அகர்வாலும், தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குனராக சுபோத் குமார் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இவர்கள் இருவரும் சட்டீஸ்கர் மாநில அதிகாரிகள் பிரிவை சேர்ந்தவர்களாவர். தற்போது, 1993ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த அகர்வால் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
- அதே போல், 1997ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த சிங் தற்போது நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது வினியோகம் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உணவு மற்றும் பொது வினியோகம் துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றுகிறார்.
- சிங்கின் பதவிக்கு தற்போது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் கூடுதல் செயலாராக பணியாற்றும் ரிச்சா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஒன்றிய தகவல் ஆணையத்தின் செயலாளராக ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் கூடுதல் செயலராக பணியாற்றும் ராஷ்மி சவுதாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இமாச்சலப்பிரதேசத்தில் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க வேளாண் உற்பத்தித் திறனைக் கூடுதலாக்கவும், பாசன வசதியை மேம்படுத்தவும் தோட்டக்கலை வேளாண் வணிகத்தை ஊக்கப்படுத்தவும் 130 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும், கையெழுத்திட்டுள்ளன.
- இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு சார்பில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் திரு ரஜத் குமார் மிஸ்ராவும், ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் அதன் இந்தியாவுக்கான இயக்குநர் திரு டேக்கோ கொனிஷியும் கையெழுத்திட்டனர்.
- இயல்பான மாதாந்திர நிதிப்பகி்ர்வு ரூ.59,140 கோடி என்பதற்குப் பதிலாக மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் 3-வது தவணையாக ரூ. 1,18,280 கோடியை மத்திய அரசு 2023 ஜூன் 12 அன்று விடுவித்துள்ளது.
- மாநிலங்கள் அவற்றின் மூலதனச்செலவை விரைவுபடுத்தவும், மேம்பாடு மற்றும் செலவுகளுக்கு நிதி வழங்கவும், முன்னுரிமை திட்டங்களுக்கு நிதி ஆதாரங்கள் கிடைக்கச்செய்யவும் ஏதுவாக 2023 ஜூன் மாதத்தின் இயல்பான தவணை நிலுவையோடு கூடுதலாக ஒரு தவணை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
- இதன்படி மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளில் இருந்து 2023 ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.4825 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.