Type Here to Get Search Results !

10th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


10th JUNE 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆசிய கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3
  • சிங்கப்பூரில் நடைபெற்ற இந்த தொடரில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்தியா 232-234 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி 235-238 என்ற கணக்கில் கொரியாவிடம் வீழ்ந்தது.
  • மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-5 என்ற கணக்கில் கொரியாவிடம் தோல்வி கண்டது. அதேவேளையில் ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்தியா 1-5 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வியை சந்தித்தது.
  • ஆடவருக்கான தனிநபர் ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியின் இந்தியாவின் பார்த் சலுங்கே 2-6 என்ற கணக்கில் சீனாவின் ஜியாங்ஸுவிடம் தோல்வி அடைந்து வெளிப் பதக்கம் பெற்றார். 
  • மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ருமா பிஸ்வாஸ் 2-6 என்ற கணக்கில் சீனாவின் அன் குயிஸுவானிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இந்தத் தொடரில் இந்தியா 6 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 5-வது இடம் பிடித்து நிறைவு செய்தது.
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இகா ஸ்வியாடெக் சாம்பியன்
  • பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கரோலினா முகோவாவுடன் (26 வயது, 43வது ரேங்க்) நேற்று மோதிய நடப்பு சாம்பியன் ஸ்வியாடெக் (22 வயது, போலந்து),  6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி தொடர்ந்து 2வது முறையாகவும், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3வது முறையாகவும் கைப்பற்றி சாதனை படைத்தார். 
  • மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 46 நிமிடத்துக்கு நீடித்தது. ஸ்வியாடெக் வென்ற 4வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. அவர் பிரெஞ்ச் ஓபனில் 3 (2020, 2022, 2023), யுஎஸ் ஓபனில் (2022) ஒரு முறை பட்டம் வென்றுள்ளார். 
மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைதிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது
  • மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். 
  • இந்தக் குழுவில் முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
  • சுமுகமான உரையாடல், முரண்படும் கட்சிகள்/குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்குவதே குழுவின் பணியாகும். சமூக ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே சுமுகமான தொடர்பை இக்குழு எளிதாக்க வேண்டும்.
  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திருஅமித் ஷா, மே 29 முதல் ஜூன் 1 வரை மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று, நிலைமையை ஆய்வு செய்த பின்னர் அமைதிக் குழுவை அமைப்பதாக அறிவித்தார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel