Type Here to Get Search Results !

28th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


28th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
  • புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முதலில், கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஒம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர். 
  • இதையடுத்து, நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் நிகழ்வு நடைபெற்றது. விழா மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்ட செங்கோலுக்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. 
  • திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட செங்கோலுக்கு பூஜை செய்யப்பட்டது. 
  • மேலும், அனைத்து ஆதீனங்களும் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அப்போது, புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார். 
  • இதையடுத்து, வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்கள். 
  • புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார். 
  • இதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 
  • இதையடுத்து, நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு அளித்து பிரதமர் மோடி கவுரவித்தார். இதன் தொடர்ச்சியாக சர்வமத பிரார்த்தினை நடைபெற்றது. 
முன்னேற்றத்துக்கான இந்திய பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் இரண்டாவது அமைச்சர்கள் அளவிலான கூட்டம்
  • முன்னேற்றத்துக்கான இந்திய –பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் இரண்டாவது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நடைபெற்றது. 
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
  • டோக்கியோவில், அமெரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மற்ற கூட்டாளர் நாடுகளால் ஐபிஇஎப் கடந்த ஆண்டு மே 23 அன்று கூட்டாக தொடங்கப்பட்டது. 
  • ஆஸ்திரேலியா, புருனே, பிஜி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கொரியா குடியரசு, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், அமெரிக்கா ஆகிய 14 நாடுகளை ஐபிஇஎப் கொண்டுள்ளது. 
  • பிராந்தியத்தில் வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை முன்னேற்றும் குறிக்கோளுடன் கூட்டாளர் நாடுகளிடையே பொருளாதார ஈடுபாட்டை வலுப்படுத்த முயல்கிறது.
மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் பிரணாய் சாம்பியன் 
  • மலேசியத் தலைநகர் கோலா லம்பூரில் கடந்த 23ம் தேதி மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடங்கியது.
  • தொடரின் இறுதிநாளான இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் மற்றும் சீன வீரர் வெங் ஹோங்யாங் விளையாடினார்கள்.
  • விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், தரவரிசையில் 9-வது இடம் பிடித்து உள்ள 30 வயதுடைய பிரணாய், தொடர்ச்சியாக போராடி இறுதியில் வெற்றி பெற்று உள்ளார்.
  • முதல் சுற்றை 21-19 என்ற கணக்கில் பிரணாய் கைப்பற்றினார். 2 ஆவது சுற்றை 23-13 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். இதனால் 3ஆவது சுற்றில் ஆட்டம் அனல் பறந்தது. 
  • இறுதியாக 20-18 என்ற கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பிரணாய் தட்டிச் சென்றார். மொத்தம் 93 நிமிடங்கள் வரை இந்த போட்டி நடைபெற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel