Type Here to Get Search Results !

25th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


25th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

விக்ராந்த் கப்பலில் இறங்கியது போர் விமானம் வரலாற்று சாதனை
  • ராணுவ தளவாட உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு பெற்று வரும் வேளையில், நம் கடற்படைக்காக ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற மிக பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்., மாதம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பலின் வாயிலாக, 40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான எடையை தாங்கக் கூடிய, விமானம் தாங்கி போர் கப்பல்களை தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
  • மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில், வான்வழி மற்றும் கப்பல் வழி ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் அதிநவீன வசதிகள் உள்ளன.
  • இதில் ஒரே நேரத்தில் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிறுத்த முடியும். 
  • இந்த ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில், பல்வேறு போர் விமானங்களை தரை இறக்கச் செய்யும் பயிற்சிகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. 
  • இந்த வரிசையில், ரஷ்ய தயாரிப்பான, மிக் 29கே போர் விமானம் மற்றும் கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை, ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் நம் வீரர்கள் கடந்த பிப்., மாதம் தரை இறக்கினர். 
  • மேலும், இரவு நேரங்களில் போர் விமானங்கள் கப்பலில் இதுவரை தரை இறக்கப்பட்டது இல்லை. இந்நிலையில், விக்ராந்த் கப்பல் அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது, இரவு நேரத்தில் மிக் 29கே போர் விமானத்தை பைலட்கள் முதல்முறையாக தரை இறக்கினர்.
டேராடூனில் இருந்து தில்லிக்கு வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
  • டேராடூனில் இருந்து தில்லிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலின் தொடக்க சேவையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்து தேசத்திற்கு அர்ப்பணித்தார். 
  • உத்தராகண்ட்டில் புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அந்த மாநிலத்தை 100 சதவீத மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்கள் கொண்ட மாநிலமாக அவர் அறிவித்தார்.
  • இது உத்தராகண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்படும் முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையாகும். உலகத் தரத்திலான வசதிகளுடன் சிறப்பான பயண அனுபவத்தை இந்த ரயில் வழங்கும். 
  • குறிப்பாக, அம்மாநிலத்திற்கு சுற்றுலா செல்வோருக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக அமையும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ரயில், கவாச் தொழில் நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
முக்கிய பயிர்களின் உற்பத்தி குறித்த மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்
  • 2022-23 விவசாய ஆண்டின் முக்கிய பயிர்களின் உற்பத்தி குறித்த மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகள் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 
  • உணவு தானியங்கள் – 3305.34 லட்சம் டன் (பதிவு)
  • அரிசி – 1355.42 லட்சம் டன் (பதிவு)
  • கோதுமை - 1127.43 லட்சம் டன் (பதிவு)
  • கம்பு - 111.66 லட்சம் டன்
  • மக்காச்சோளம் – 359.13 லட்சம் டன் (பதிவு)
  • மொத்த பருப்பு வகைகள் - 275.04 லட்சம் டன்
  • எண்ணெய் வித்துக்கள் – 409.96 லட்சம் டன்(பதிவு)
  • பருத்தி – 343.47 லட்சம் பேல்கள் (ஒவ்வொன்றும் 170 கிலோ)
  • கரும்பு - 4942.28 லட்சம் டன்கள் (பதிவு)
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 3305.34 லட்சம் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டான 2021-22-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 149.18 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும்.
  • 2022-23-ம் ஆண்டில் அரிசியின் மொத்த உற்பத்தி (பதிவு) 1355.42 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 60.71 லட்சம் டன் அதிகம்.
  • நாட்டில் கோதுமை (பதிவு) உற்பத்தி 1127.43 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டு உற்பத்தியை விட 50.01 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel