14th May 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கர்நாடக காவல் துறை தலைவர் பிரவீன் சூட் சிபிஐ புதிய இயக்குநராக நியமனம்
- மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால் வரும் 25-ம் தேதி ஓய்வுபெற உள்ளார். இதையடுத்து புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கியது.
- இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய உயர்நிலை தேர்வுக்குழு கூட்டம் காலையில் நடைபெற்றது.
- இதில், கர்நாடக டிஜிபி பிரவீன் சூட், மத்திய பிரதேச ஐபிஎஸ் அதிகாரி சுதிர் சக்சேனா மற்றும் பஞ்சாப் ஐபிஎஸ் அதிகாரி தின்கர் குப்தா ஆகிய 3 மூத்த அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
- இதில் இப்போது கர்நாடக மாநில காவல் துறை தலைவராக (டிஜிபி) உள்ள பிரவீன் சூட் சிபிஐ புதிய இயக்குநராக நியமிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
- இதையடுத்து, இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் நேற்று மாலை பிறப்பித்தது. இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.
- ஐஐடி-டெல்லி பட்டதாரியான பிரவீன் சூட், 1986-ல் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ள இவர்மிகவும் திறமையாக செயல்பட்டுள்ளார்.
- குறிப்பாக, 2004 முதல் 2007 வரையில் மைசூரு மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய இவர், பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார். இவர் கடந்த 2018 முதல் கர்நாடக டிஜிபியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடற்படை பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலில் இருந்து ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. கப்பலில் இருந்து சீறிப் பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியது.
- ஏவுகணைகளை வீசும்திறன் வாய்ந்த ஐஎன்எஸ் மர்மகோவா கப்பலும், பிரம்மோஸ்ஏவுகணையும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.
- இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மோஸ் ஏவுகணையை தற்போது நிலப் பகுதியிலிருந்தும், விமானத்திலிருந்தும், கப்பலில் இருந்தும், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும் ஏவ முடியும்.
- உலகிலேயே அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தின் 8,848.86 மீட்டர் உயர உச்சியை அடைந்தவர் என்ற சாதனையை நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டியான, 52 வயது, கமி ரீடா ஷெர்பா படைத்திருந்தார்.
- அவர் 26வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, தமது முந்தைய சாதனையை முறியடித்திருந்தார்.
- இந்நிலையில், பசங் தவா ஷெர்பா 26வது முறையாக, 8,849 மீட்டர் உயர உச்சியை அடைந்து, நேபாள வழிகாட்டி கமி ரீடாவின் சாதனையை சமன் செய்துள்ளார். இவர் ஹங்கேரியை சேர்ந்த மலையேறும் வீரருடன் சேர்ந்து எவரெஸ்ட் உச்சியை அடைந்தார்.
- இதற்கிடையே கமி ரீடா தனது 27வது பயணத்துக்காக எவரெஸ்ட் அடிவாரத்தில் முகாமிட்டுள்ளார். இந்த வாரத்தில் மட்டும் 5 வெளிநாட்டினர் உள்பட 19 மலையேற்ற வீரர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் உச்சியை தொட்டுள்ளனர்.
- உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் கவரட்டி, மே 14-19 வரை இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு பயிற்சியான சமுத்ரா சக்தி-23 இன் 4வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவின் படாமிற்கு வந்தடைந்தது.
- இந்திய கடற்படையின் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானம் மற்றும் சேடக் ஹெலிகாப்டர் ஆகியவையும் இதில் பங்கேற்கின்றன.
- இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த கேஆர்ஐ சுல்தான் இஸ்கந்தர் முடா, சிஎன் 235 கடல்சார் ரோந்து விமானம் மற்றும் பாந்தர் ஹெலிகாப்டர் ஆகியவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
- சமுத்திர சக்தி பயிற்சியானது இரு கடற்படைகளுக்கும் இடையே இயங்கக்கூடிய தன்மை, கூட்டு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தொழில்முறை தொடர்புகள், நிபுணத்துவ பரிமாற்றங்கள் மற்றும் விளையாட்டு சாதனங்கள் ஆகியவை பயிற்சியில் அடங்கும். கடல் பயிற்சியின் போது, ஆயுதம் வீசுதல், ஹெலிகாப்டர் செயல்பாடுகள், நீர்மூழ்கி எதிர்ப்பு போர், வான் பாதுகாப்பு பயிற்சிகள் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
- பாதுகாப்புத் துறையில் '‘தற்சார்பு இந்தியா’'வை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் இறக்குமதியைக் குறைப்பதற்கும், ரூ. 715 கோடி மதிப்புள்ள இறக்குமதி மானியத்துடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் கொண்ட 4வது ஆக்கபூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த சாதனங்களின் விவரங்கள் ஸ்ரீஜன் இணையப்பாக்கத்தில் (https://srijandefence.gov.in/) கிடைக்கின்றன. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குப் பிறகே இவை இந்தியத் தொழில்துறையிலிருந்து கொள்முதல் செய்யப்படும்.
- இந்த நான்காவது உள்நாட்டு மயமாக்கல் பட்டியல் (பிஐஎல்) மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் தொடர்பாக 2021 டிசம்பர், 2022 மார்ச், 2022 ஆகஸ்ட் என ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பட்டியல்களின் தொடர்ச்சியாகும்.
- ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியல்களில் 2,500 சாதனங்கள் உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன. மேலும் 1,238 (351+107+780) சாதனங்கள் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உள்நாட்டுமயம் ஆக்கப்படவுள்ளன.
- இவற்றில் 310 சாதனங்கள் (1வது பிஐஎல் - 262, 2வது பிஐஎல் - 11, 3வது பிஐஎல் - 37) இதுவரை உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன.
- நியூ லைப் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பில் தேஜஸ்வின் சங்கர் 24, பங்கேற்றார். இவர், 2018ல் அமெரிக்க தொடரில் 2.29 மீ., தாண்டி தேசிய சாதனை படைத்திருந்தார்.
- கடந்த 2022 காமன்வெல்த்தில் (பர்மிங்காம்) வெண்கலம் வென்ற தேஜஸ்வின் சங்கர், இம்முறை 2.21 மீ., தாண்டி, இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
- 2007, உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பஹாமஸ் வீரர் டொனால்டு தாமஸ் 38, இம்முறை 2.26 மீ., உயரம் தாண்ட, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். ஜமைக்கா வீரர் லுஷேன் வில்சன் (2.21 மீ.,) இரண்டாவது இடத்தை சங்கருடன் பகிர்ந்து கொண்டார்.