Type Here to Get Search Results !

21st April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


21st April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதகள் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம்
  • தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதனை பின்பற்றும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். 
  • அப்போது, வேலை நேரத்தை உயர்த்துவதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக-வின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
  • எனினும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 
ஆர்இசியின் துணை நிறுவனமான ஆர்இசிபிடிசிஎல், KPS1 டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தை மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது
  • மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஆர்இசி-யின் ஆர்இசி பவர் டெவலப்மென்ட் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் (ஆர்இசிபிடிசிஎல்) டிரான்ஸ்மிஷன் திட்டத்தின் கட்டுமானத்திற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்க நிறுவனமான கேபிஎஸ்1 டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தை மேகா என்சீனியரிங் & இன்பராஸ்ட்ரக்சர் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. 
  • இந்த நிறுவனம் கையளிக்கப்பட்டதன் மூலம், ரூ.70, 974 கோடிமதிப்பிலான 52 டிரான்ஸ்மிஷன் திட்டங்களை, ஆர்இசிபிடிசிஎல் வெற்றிகரமாக ஒப்படைத்தது.
  • ஆர்இசிபிடிசிஎல்- இன் தலைமை செயல் அதிகாரி திரு ராகுல் திவேதி, மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் துணைத் தலைவர் திரு பிரவின் ஷரத் தீக்ஷித்திடம் எஸ்பிவியை ஒப்படைத்தார்.
  • மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட். இந்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத் திட்டத்தின் வெற்றிகரமான ஏலதாரர் ஆகும்.
  • இந்த வேலையில் 765 கி.வா இரட்டை மின்சுற்று லைன் மற்றும் கவ்தா PS1 இன் விரிவாக்கம் ஆகியவை அடங்கும். இத்திட்டத்தை 21 மாதங்களில் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய கொவிட்-19 தடுப்பூசி திட்டம், புத்தாக்கத்திற்கான பொது நிர்வாகத்துறையில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதை 2022 பெறுகிறது
  • மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய கொவிட்-19 தடுப்பூசி திட்டம், புத்தாக்கத்திற்கான பிரிவில் பொது நிர்வாகத்துறையில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதை 2022 பெறுகிறது. 
  • விஞ்ஞான் பவனில் 16-வது குடிமைப்பணி சேவைகள் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியிடமிருந்து விருதை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் செயலர் திரு ராஜேஷ் பூஷன் பெற்றுக்கொண்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel