Type Here to Get Search Results !

18th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


18th April 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருது - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
  • தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் `சிறந்த நெசவாளர் விருது' ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
  • மேலும், ஜவுளித் தொழிலின் நுட்பங்கள், வடிவமைப்பு மற்றும் காலமாற்றத்துக்கேற்ற வண்ணங்களின் போக்கை கணித்தல் ஆகியவற்றில் பங்களிப்பு திறன் கொண்ட வடிவமைப்பாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான `சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது' 2022-23-ம் ஆண்டில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • அதன்படி, 2022-23-ம் ஆண்டுக்கான சிறந்த பட்டு நெசவாளர் விருதுக்கான முதல் பரிசு- திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர் வி. ராஜலெட்சுமிக்கும், 2-ம் பரிசு காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு சங்க உறுப்பினர் எம். சுரேஷுக்கும், 3-ம் பரிசு ஆரணி பட்டு சங்க உறுப்பினர் எம். மணிக்கும், பருத்தி ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசு, பரமக்குடி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கைத்தறி நெசவாளர் சங்க உறுப்பினர் எம்.கே.சரவணன், 2-ம் பரிசு பரமக்குடி, கலைமகள் கைத்தறி நெசவாளர் சங்க உறுப்பினர் ஜி.எல்.நாகராஜனுக்கும், 3-ம் பரிசு சேலம், தோப்பூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் க.இந்திராணிக்கும் என 6 விருதாளர்களுக்கு ரூ.20 லட்சத்துக்கான காசோலைகள், பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  • இளம் வடிவமைப்பாளர் விருதில் முதல் பரிசு கோயம்புத்தூரைச் சேர்ந்த ம.சண்முகப்பிரியாவுக்கும், 2-ம் பரிசு பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 2-ம் ஆண்டு வடிவமைப்பு தொழில்நுட்பம் படிக்கும் திருப்பூர், வி.சிபினுக்கும், 3-ம் பரிசு ஆரணியைச் சேர்ந்த ம.ஜ.கிரண்குமாருக்கும் பரிசுத்தொகையாக ரூ.2.25 லட்சத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  • நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, கைத்தறித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி ஆணையர் த.பொ.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இந்திய கடற்படையின் பணியாளர் சேவை கட்டுப்பாட்டாளராக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார்
  • வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் ஏப்ரல் 17-ந் தேதி இந்திய கடற்படையின் பணியாளர் சேவைகளின் கட்டுப்பாட்டாளராகப் பொறுப்பேற்றார். 1987-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பணியில் சேர்ந்த அவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர்களில் நிபுணராவார். 
  • அவர் கடக்வாஸ்லா தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். இங்கிலாந்தின் ஸ்ரீவென்கம் இணைப்படைப்பிரிவு கல்லூரி, கராஞ்சா கடற்படை கல்லூரி, அமெரிக்காவின் நியூபோர்ட் கடற்படை கல்லூரி ஆகியவற்றில் அவர் பயின்று தேர்ச்சிபெற்றார்.
  • அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்ற அவர், ஏவுகணைக் கப்பல்களான ஐஎன்எஸ் வித்யுத், ஐஎன்எஸ் வினாஷ், ஐஎன்எஸ் குலிஷ்; வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் ஐஎன்எஸ் மைசூர்; விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியவற்றில் அவர் பணியாற்றியுள்ளார்.
  • பதவி உயர்வு பெற்று, கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தலைமையகத்தின் தலைமைப் பணியாளர் அதிகாரியாக (பயிற்சி) அவர் பணியாற்றினார். 
  • இந்திய கடற்படையில் அனைத்து பயிற்சிகளையும் நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். பல்வேறு பதவிகளை வகித்த அவர், மேற்கு கடற்படை கமாண்டிங் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel