Type Here to Get Search Results !

30th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


30th March 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு கொண்டாடப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
  • கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் சோமநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலை சுற்றியிருந்த தெருக்களில் பிற சாதியினர் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலமாக இருந்து வந்தது. 
  • இந்நிலையில், இப்பிரச்சனைக்காக 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி காலை 6 மணிக்கு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. 
  • இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும். இந்த அறவழிப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இதில் பெரியார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • இந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா இன்று (மார்ச் 30 ) கொண்டாடப்படுகிறது. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 
கொல்கத்தா உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமனம்
  • கடந்த 1963ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பிறந்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற பின்னர் 1986ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கினார். 
  • 2000ம் ஆண்டில் மத்திய அரசின் வழக்கறிஞராக இருந்த டி.எஸ். சிவஞானம் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  • 2011ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட டி.எஸ். சிவஞானம் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். 
  • இந்நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், அதே உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள டி.எஸ். சிவஞானத்தை அடுத்த பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.
  • இந்நிலையில் நீதிபதி டி.எஸ். சிவஞானத்தை கொல்கத்தா உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.420 கோடியில் 24x7 குடிநீர் திட்டம், 25 நவீன தகன மேடைகள்: நகராட்சி நிர்வாகத் துறை புதிய அறிவிப்புகள்
  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் (மார்ச் 30) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. 
  • இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 
  • 9 மாநகராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளில் ரூ.420 கோடியில் 24x7 குடிநீர் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
  • கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட 6 மாநகராட்சிகளில் ரூ.22.50 கோடி மதிப்பீட்டில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை செயலாக்கும் ஆலைகள் அமைக்கப்படும்.
  • 3 மாநகராட்சிகள் மற்றும் 9 நகராட்சிகளில் ரூ.174 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
  • அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளும் ரூ.52.50 கோடியில் 25 புதிய நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.
  • ரூ.150 கோடியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் (ம) பழைய பள்ளிக் கட்டடங்கள் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்படும்.
  • மாநகராட்சிகள், நகராட்சிகளில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு பயன்படும் வகையில் 100 பூங்காக்கள் மற்றும் பசுமை இயற்கை வளங்களை மேம்படுத்த ரூ.60.90 கோடி ஒதுக்கீடு.
  • மாநகராட்சிகள், நகராட்சிகளில் 400 கி.மீ நீளமுள்ள மண்சாலைகளை தார்சாலை, கான்கிரீட் சாலை அல்லது பேவர் பிளாக் சாலைகளாக தரம் உயர்த்த ரூ.288 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு.
  • ரூ.345 கோடி மதிப்பீட்டில் 20 பேரூராட்சிகளில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • 10 பேரூராட்சிகளில் ரூ. 25 கோடியில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் 10 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
  • நிலத்தடி நீரை பாதுகாக்கும் வண்ணம், முதற்கட்டமாக ரூ.50 கோடியில் 20 பேரூராட்சிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படும்.
  • ரூ.50 கோடியில் 100 நீர்நிலைகள், பேரூராட்சிகளில் மேம்படுத்தப்படும்.
  • பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதலை உறுதி செய்யும் பொருட்டு ரூ.7 லட்சம் செலவில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும்.
ஆகாஷ் ஆயுதம் மற்றும் சமவெளிகளைக் கண்டறியும் 12 ரேடார் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக ரூ.9,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் 
  • தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடையும் வகையில், ராணுவத்திற்காக தரம் உயர்த்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை மற்றும் சமவெளிகளைக் கண்டறியும் 12 ரேடார் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக ரூ.9,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் இன்று (மார்ச் 30, 2023) கையெழுத்திட்டது. 
  • தரம் உயர்த்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை (ஏடபிள்யூஎஸ்) கொள்முதலுக்கான ஒப்பந்தமானது பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது. 
  • இதன் மதிப்பு ரூ.8,160 கோடியாகும். இந்த ஆயுதங்கள் ராணுவத்தின் வான் பாதுகாப்பு படைப்பிரிவுக்காக கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகள், தரையிலிருந்து உதவும் கருவிகள் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
  • ஆகாஷ் ஆயுத முறை (ஏடபிள்யூஎஸ்) என்பது நிலத்திலிருந்து வான்வழி நோக்கி குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் தன்மை படைத்த வான்வழிப்பாதுகாப்பு முறையாகும். இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • வான்வழி ஊடுருவல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக இந்த (ஏடபிள்யூஎஸ்) தரம் உயர்த்தப்பட்டு வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் வடக்கு எல்லைகளில் ராணுவப் பயன்பாட்டிற்காக இவை கொள்முதல் செய்யப்படுகின்றன.
11 நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை கப்பல்களை வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன், பாதுகாப்பு அமைச்சகம் ரூ.19,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தம்
  • தற்சார்பு இந்தியா என்ற இலக்கை வலப்படுத்தும் நடவடிக்கையாக, 11 நவீன ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் 6 ஏவுகணை தாங்கி கப்பல்களை வாங்க உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுடன், பாதுகாப்பு அமைச்சகம் ரூ.19,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இன்று (2023 மார்ச் 30) கையெழுத்திட்டுள்ளது.
  • 11 அடுத்த தலைமுறை ஆழ்கடல் ரோந்து கப்பல்களை வாங்க கோவா கப்பல் கட்டும் நிறுவனம் (ஜிஎஸ்எல்) மற்றும் கார்டன் ரீச் கப்பல் கட்டும் (ஜிஆர்எஸ்இ) நிறுவனங்களுடன் ரூ. 9,781 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 
  • இந்த 11 கப்பல்களில் 7 கப்பல்கள் ஜிஎஸ்எல் நிறுவனத்தின் மூலமாகவும், 4 கப்பல்கள ஜிஆர்எஸ்இ நிறுவனத்தின் மூலமாகவும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட உள்ளன. 
  • இந்த கப்பல்கள் 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முழுமையாக வடிவமைக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • அடுத்த தலைமுறை ஏவுகணை கப்பல்களை (என்ஜிஎம்இ) வடிவமைக்க கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் (சிஎஸ்எல்) ரூ. 9,805 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கப்பல்கள் 2027 மார்ச் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்திய கடற்படைக்கு ரூ.1,700 கோடி மதிப்பிலான 13 எல்ஒய்என்எக்ஸ்-யு2 தீயணைப்பு உபகரணங்களை வாங்குவதற்காக பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
  • தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய ஏதுவாக கடற்படைக்கு ரூ.1,700 கோடி மதிப்பிலான 13 எல்ஒய்என்எக்ஸ்-யு2 தாக்குதல் கட்டுப்பாட்டு உபகரணங்களை வாங்குவதற்காக பெல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் 2023-ஆம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 13 எல்ஒய்என்எக்ஸ்-யு2 தாக்குதல் கட்டுப்பாட்டு முறை என்பது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது.
  • இந்த 4-ம் தலைமுறை உபகரணம் கோவா, கப்பல் கட்டுமான நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் புதிய தலைமுறை கரையோர ரோந்து கப்பலில் பொருத்தப்பட உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel