சென்னையில் ஒன்றிய கல்வித்துறை சார்பிலான ஜி20 கல்விக்குழு மாநாடு
- ஜி20 உச்சி மாநாடு 2022-23ம் ஆண்டில் நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. ஜி20 உச்சி மாநாடு டில்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளுடன் சேர்ந்து கருத்தரங்குகள் நடந்து வருகிறது.
- அதன் ஒருபகுதியாக ஒன்றிய கல்வித்துறை சார்பிலான ஜி20 கல்விக்குழு மாநாடு சென்னை தரமணியில் உள்ள ஐஐடியின் ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் தொடங்கியது.
- இந்த தொடக்க விழாவில், ஒன்றிய உயர்கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, ஒன்றிய உயர்கல்வித்துறை செயலர் சஞ்சய் குமார், ஐஐடி இயக்குநர் காமகோடி, தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், பேராசிரியர்கள் என 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- சென்னையில் சர்வதேச அளவில் கல்வி தொடர்பான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுவது இதுவே முதல்முறை. இந்த கண்காட்சியில் 50க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
- குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து மாநில கல்வித்துறையின் சார்பில் நான் முதல்வன், நம்ம பள்ளி திட்டங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் அரங்குகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.
- ஒன்றிய அரசின் இந்திய ஸ்வையம், சமர்த், தீக்ஷா போன்ற திட்டங்கள் பற்றியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உபகரணங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் இந்தியா நிறுவனங்கள் மற்றும் சவுதி அரேபியா, பிரான்ஸ், சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைத்துள்ளன.
- ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அடுத்த மாதம் மார்ச் 3,4ம் தேதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக, டெல்லியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவிற்கு என தலைநகர் இல்லாமல் இருந்தது. ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் விரைவில் செயல்பட தொடங்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
- இஸ்ரேலின் 2வது பெரிய துறைமுகமான ஹைபா துறைமுகத்தை தனியார் மயமாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தத்தை சுமார் ரூ.10 ஆயிரம் கோடியில் அதானி குழுமம் கைப்பற்றியது.
- இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஹைபா துறைமுகத்தின் செயல்பாட்டு பொறுப்பை அதானி குழுமத்திடம் முறைப்படி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதானி குழும தலைவர் கவுதம் அதானி கலந்து கொண்டு துறைமுக பதிவு புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.
- நாடாளுமன்றத்தின் முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதியாக முர்மு பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தில் ஆற்றும் முதல் உரை இது.
- வரும் 2047ம் ஆண்டிற்குள் இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக உருவாக்க மக்கள் அனைவரும் உழைக்க வேண்டும்' என ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற பட்ஜெட் தொடரை தொடங்கி வைத்து, கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.