9th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
அதிவேகமாக 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர்
- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
- சர்வதேச அளவில் அஷ்வின் தான் குறைந்த போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் ஆவர். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் இருக்கிறார்.
- நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில், அலெக்ஸ் கெரீ விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் அஷ்வினின் 450-வது டெஸ்ட் விக்கெட் ஆகிவிட்டார் அலெக்ஸ் கெரீ.
- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 450 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை தொட்ட ஒன்பதாவது வீரர் அஷ்வின் ஆவார்.
- சமூகத்தின் அடிப்படையில் மதிப்பின் அடித்தளமாக பெண்கள் என்ற தேசிய மாநாடு, குடும்பத்திற்கு அதிகாரமளித்தல் என்ற அகில இந்திய விழிப்புணர்வு இயக்கம் ஆகியவற்றை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு குருகிராமில் உள்ள ஓம் சாந்தி பிரம்ம குமாரிகள் உறைவிட மையத்தில் இன்று (பிப்ரவரி 9, 2023) தொடங்கி வைத்தார்.
- சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, உயிரி பன்முகத்தன்மை மேம்பாடு குறித்த நிகழ்வுகளுக்கிடையே முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த பருவநிலை பணிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது.
- இக்கூட்டத்தில் பேசிய சுற்றுச்சூழல் வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் திரு சந்திர பிரகாஷ் கோயல், பொருளாதாரம், நிதி, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களில் ஜி20 நாடுகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து தெரிவித்தார்.
- கடந்த காலங்களில் ஜி20 தலைமைத்துவத்தின் போது, மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளை ஒருங்கிணைந்து முன்னெடுத்து செல்வது என்பதை இந்தியா கவனத்தில் வைத்துள்ளதாக கூறினார்.
- இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்குழுமத்தின் தலைமை இயக்குநர் திரு ஏ எஸ் ராவத், வனத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகள், சுரங்கம் மறுசீரமைத்தல் தொடர்பாக விவாதித்தார்.