Type Here to Get Search Results !

24th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


24th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதலாவது கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்
  • இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதலாவது கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். 
  • அப்போது பிரதமர் பேசுகையில், இன்று உலகளவில் எதிர்கொள்ளப்படும் சவால்களை சுட்டிக் காட்டிய அவர், 'மோசமான பொருளாதார சூழல்களை உலகம் சந்தித்து வரும் வேளையில், உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார தலைமைத்துவத்தின் பிரதிநிதியாக கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
  • கொரோனா பெருந்தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் தாக்கங்கள், அதிகரித்து வரும் புவி- அரசியல் நிகழ்வுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இடையூறுகள், விலையேற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உட்பட பல விஷயங்கள, உலகின் முன்னணி பொருளாதாரங்கள் மற்றும் நிதி அமைப்புமுறைகளின் பாதுகாவலர்களை சார்ந்துள்ளது.
  • நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து இந்திய நுகர்வோர் மற்றும் தயாரிப்பாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. உலக அளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக கூடிய மக்கள் குறித்து விவாதங்களில் உறுப்பினர்கள் கவனம் செலுத்தவும். 
  • அம்மக்களை உள்ளடக்கிய திட்டத்தை உருவாக்குவதன் வாயிலாக மட்டுமே, உலகின் நம்பிக்கையையும் சர்வதேச பொருளாதார தலைமைத்துவத்தையும் மீண்டும் கொண்டு வர இயலும். 
  • 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற தொலைநோக்குப் பார்வையை இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருள் ஊக்குவிக்கிறது. 
  • உலக மக்கள் தொகை 8 பில்லியனைக் கடந்துள்ள போதும், நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம், தொய்வடைகிறது' என்றார்.
  • தொடர்ந்து இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்புமுறை பற்றி பேசிய அவர், 'யு.பி.ஐ என்ற இந்தியாவின் தலைசிறந்த டிஜிட்டல் கட்டணத் தளத்தை ஜி20 விருந்தினர்கள் பயன்படுத்த இது வழிவகை செய்கிறது. 
  • யு.பி.ஐ போன்ற உதாரணங்கள் ஏராளமான இதர நாடுகளுக்கும் முன்மாதிரியாக செயல்படலாம். எங்களது அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவதோடு, இதன் உந்துசக்தியாக ஜி20 செயல்படக்கூடும்' என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற ஐ.நா.வில் தீர்மானம்
  • ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி இன்றுடன் (பிப். 24) ஓராண்டு நிறைவடைகிறது. இப்போர் இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவின் அண்டை நாடுகள் ரஷ்யா, உக்ரைன் இடையே பனிப்போர் நிலவியது.
  • அமெரிக்கா, பிரிட்டன் அடங்கிய நேட்டோ படையில் சேர உக்ரைன் விரும்பியது. இது தனது பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் என ரஷ்யா கருதியது. 
  • உடனே உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்தது. அப்போது உக்ரைனிலிருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
  • 193 உறுப்பினர்கள் நாடுகள் பங்கேற்றன.இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் ஓட்டளித்தனர். எதிராக 7 நாடுகள் ஓட்டளித்தனர். இந்தியா, சீனா உள்பட 32 நாடுகள் தீர்மானத்தின் மீது நடந்த ஒட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. பெரும்பான்மை ஆதரவு இருந்ததால், தீர்மானம் நிறைவேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1292.65 கோடி மதிப்பீட்டில் 32 கி.மீ தொலைவிற்கான ஆறு வழி பசுமைச் சாலைக்கு திரு.நிதின் கட்கரி ஒப்புதல்
  • மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி பாரத்மாலா பரியோஜானா - நாட்டின் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான விரிவான ஒரு செயல் திட்டத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1292.65 கோடி மதிப்பீட்டில் சந்திரசேகரபுரத்திலிருந்து போலாவரம் வரையிலான பெங்களூரு-விஜயவாடா பொருளாதார 32 கி.மீ தொலைவிற்கான ஆறு வழி பசுமை சாலைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
  • கோடிகொண்டா சோதனைச் சாவடி முதல் முப்பாவரம் வரையிலான 342.5 கி.மீ தொலைவிற்கு பசுமை வழிச் சாலையாக மாற்றம் பெறுகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் 14 தொகுப்புகளாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. 
ஏப்ரல் 2022 – ஜனவரி 2023 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 16% அதிகரித்து 698.25மில்லியன் டன்னை எட்டியுள்ளது
  • உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019-20-ஆம் நிதியாண்டில் 730.87 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி, 2021-22-ஆம் ஆண்டில் 778.19 மில்லியன் டன்னாக அதிகரித்தது. 
  • இந்த நிதியாண்டிலும் நிலக்கரி உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 2022 – ஜனவரி 2023 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 698.25 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. 
  • இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 16% அதிகமாகும். 2021-22ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 601.97 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. 
  • இந்த காலகட்டத்தில் கோல் இந்தியா நிறுவனத்தின் சொந்த உற்பத்தி 478.12 மில்லியன் டன்னிலிருந்து 550.93 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. 
  • இது 15.23% அதிகமாகும். கூடுதல் மின் நுகர்வால் ஏற்படும் நிலக்கரித் தேவையை சமாளிக்க இந்த உற்பத்தி உயர்வு உதவிகரமாக அமைந்துள்ளது.
  • 2025-ஆம் நிதியாண்டில் 1.31 பில்லியன் டன்னாகவும், 2030-ஆம் நிதியாண்டின் 1.5 பில்லியன் டன்னாகவும் நிலக்கரி உற்பத்தியை உயர்த்த நிலக்கரி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 
  • நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரி அமைச்சகம் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக வணிக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel