Type Here to Get Search Results !

10th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


10th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஜம்மு காஷ்மீரில் 5.9 டன் லித்தியம் கண்டுபிடிப்பு
  • ஒட்டுமொத்த உலகமும் மின்சார வாகனத்தை நோக்கி செல்லும் நிலையில் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியத்தின் தேவை என்பது அதிகமாக உள்ளது.
  • இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டம் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 டன் லித்தியம் உலோகத்தின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இதன்மூலம் உலகளவில் லித்தியம் இருப்பில் சிலிக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தை பிடிக்க உள்ளது.
  • காஷ்மீரில் 5.9 டன் லித்தியம் உலோகம் இருக்கும் நிலையில் கர்நாடகா மாநிலம் மண்டியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1,600 டன்கள் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா சாதனை
  • நாக்பூர் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோஹித் சர்மா. 
  • இந்த வகையில் உலக அரங்கில் இலங்கையின் திலகரத்னே தில்ஷான், தென் ஆப்பிரிக்காவின் டு பிளெஸ்ஸிஸ், பாகிஸ்தானின் பாபர் அஸம் ஆகியோர் ஏற்கெனவே டி 20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருந்தனர்.
எடை குறைந்த செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை
  • நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் மூலம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. 
  • இதில், பிஎஸ்எல்வி மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி மூலம் 4,000 கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
  • சிறிய செயற்கைக் கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வதற்காக எஸ்எஸ்எல்வி (Small Satellite Launch Vehicle-SSLV) எனும் ராக்கெட்டை இஸ்ரோ புதிதாக வடிவமைத்தது. 120 டன் எடை கொண்ட இதன் உயரம் 35 மீட்டர். மற்ற ராக்கெட்களைவிட குறைந்த அவகாசம், செலவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இதையடுத்து, புதிதாக தயாரிக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட்மூலம், இஓஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.
  • ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்-டவுன் அதிகாலை 2.48 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 15 நிமிடங்களில், புவியில் இருந்து 450 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் 3 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
  • இத்திட்டத்தின் முதன்மை செயற்கைக் கோளான இஓஎஸ்-7 மொத்தம் 156 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டு. இது புவி கண்காணிப்பு மற்றும் எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வு பணிகளுக்கு பயன்படும். விண்வெளியில் ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு, அலைக்கற்றையில் ஈரப்பதம் குறித்த ஆய்வுகளையும் இது மேற்கொள்ளும்.
  • கல்விசார் செயற்கைக் கோள்: இதனுடன், அமெரிக்காவின் ஜானஸ் (10.2 கிலோ), சென்னையை சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா அமைப்பின் ஆசாதிசாட்-2 (8.8 கிலோ) ஆகிய 2 செயற்கைக் கோள்களும் ஏவப்பட்டன. 
  • இதில் ஆசாதிசாட்-2 எனும் கல்விசார் செயற்கைக் கோள், நாடு முழுவதிலும் 750 மாணவிகளின் கூட்டிணைப்பில் உருவாக்கப்பட்டது. இது ரேடியோ அலைக்கற்றை குறித்த ஆய்வை அடுத்த ஓராண்டுக்கு மேற்கொள்ளும். 
  • என்சிசி 75-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில், என்சிசி பாடலை இசைக்கும்படியும் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
500 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்த ரொனால்டோ
  • சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடி வருகிறார். போட்டியில் அல் நாசர் மற்றும் அல் வெஹ்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ரொனால்டோ நான்கு கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
  • இந்தப் போட்டியில் 21-வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த முதல் கோலே அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதன் மூலம் கிளப் ஆட்டத்தில் 500 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
  • கிளப் போட்டிகளில் ரொனால்டோ இதுவரை ரியல் மாட்ரிட் அணிக்காக 311 கோல்களும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 103 கோல்களும் அடித்துள்ளார். ஜூவென்ட்ஸ் அணிக்காக 81 கோல்களும் அல்நாசர் அணிக்காக 5 கோல்களும் அடித்துள்ளார்.
லக்னோவில், உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்
  • லக்னோவில், உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். 
  • இந்த நிகழ்ச்சியின் போது உலகளாவிய வர்த்தக கண்காட்சியைத் தொடங்கி வைத்து, முதலீட்டாளர் உத்தரப்பிரதேசம் 2.0 திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். 
  • உத்தரபிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு என்பது உத்தரப்பிரதேச மாநில அரசின் முன்னோடி முதலீட்டு மாநாடாகும். 
  • தொழில்துறையினர், கல்வியாளர்கள், உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வருகை தருவதன் மூலம் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைக்கான வழிமுறைகள் கண்டறியப்படும்‌. நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் சுற்றிப் பார்த்தார்.
  • இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் படேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மாநில அமைச்சர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  • உலக நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வித்துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவரும் உத்தரப்பிரதேச அரசின் முயற்சியாகவே, பிப்ரவரி 10-12 ஆம் தேதி வரையிலான உத்தரப்பிரதேச சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2023 நடத்தப்படுகிறது. 
  • உலக நாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதுடன், நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பலப்படுத்துவதற்கும் இந்த மாநாடு வழிவகை செய்யும்.
2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
  • அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பின்டல், குஜராத் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அனுராக் தாக்கூர், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் இணைந்து 3வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை குல்மார்கில் தொடங்கி வைத்தனர்
  • மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், 3-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை குல்மார்கில் தொடங்கி வைத்தார்.
  • ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, முக்கிய பிரதிநிதிகள், இளம் வீரர்கள், பயிற்சியாளர்கள், விழாவில் கலந்து கொண்டனர்.
  • பிரதமர் திரு நரேந்திர மோடி, விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் காணொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டது. மேலும், வெள்ளைப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.
  • தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 40 கேலோ இந்தியா மையங்கள், காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel