Type Here to Get Search Results !

TNPSC 17th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு
  • நம் அண்டை நாடான பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரும், மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டவருமான ஹபீஸ் சயீதின் உறவினர் அப்துல் ரஹ்மான் மக்கியை, சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க, இந்தியா கடந்த ஆண்டு ஐ.நா.,விடம் வலியுறுத்தியது. 
  • ஆனாலும், இந்தியாவும், அமெரிக்காவும் தங்களது உள்நாட்டு சட்டப்படி, அப்துல் ரஹ்மான் மக்கியை பயங்கரவாதியாக கடந்த ஆண்டு அறிவித்தன.
  • இந்நிலையில், லஷ்கர் - இ - தொய்பா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் மற்றும் அவற்றுடன் தொடர்புடையவர்கள், குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தடை விதித்து, ஐ.நா., பாதுகாப்புக் குழு தீர்மானம் கொண்டு வந்தது. 
  • இதன் அடிப்படையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கர வாதியாக அறிவித்தது.
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பங்கஜ் நியமனம்
  • தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக எல்லை பாதுகாப்பு படையின் (பிஎஸ்எப்) முன்னாள் இயக்குநர் பங்கஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ராஜஸ்தானில் 1988ம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த சிங், 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 31, 2021ம் ஆண்டில் பிஎஸ்எப். இயக்குநராக பதவியேற்ற இவர், கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி பணிஓய்வு பெற்றார். 
  • தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை பிரகாஷ் சிங் 1993 ஜூன் முதல் 1994 ஜனவரி வரை பிஎஸ்எப் இயக்குநராக பதவி வகித்துள்ளார்.
2023ல் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் - உலக வங்கி கணிப்பு
  •  உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 30 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக பொருளாதார வளர்ச்சி மிக குறைந்த அளவை எட்டியுள்ளது.
  • கடும் பணவீக்கம், வட்டி விகித உயர்வு, முதலீடு குறைவு, ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரம் மெதுவாகவே வளர்ந்து வருகிறது. 2023-2024 உலக பொருளாதார வளர்ச்சி முறையே 1.7 மற்றும் 2.7 சதவீதமாக இருக்கும். இவ்வாறு உலக வங்கி தெரிவித்துள்ளது.
மூன்று நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி எடுக்க மத்திய நிலக்கரி அமைச்சகம் அனுமதி
  • வர்த்தக ரீதியிலான நிலக்கரியை உற்பத்தி செய்ய மேலும் மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஆணைகளை அத்துறையின் கூடுதல் செயலாளர் திரு நாகராஜூ வழங்கினார். 
  • இதன்மூலம் எரிசக்தி பாதுகாப்பில் தனியாரின் பங்களிப்பை உறுதி செய்திருப்பதாக குறிப்பிட்ட அவர், நிலக்கரி சுரங்க மேம்பாட்டுக்கு தங்களது முழு திறனையும் செயல்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
  • இந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி ஆண்டுக்கு 3.7 மில்லியன் டன்னாகவும், புவியியல் இருப்பு 156.57 மெட்ரிக் டன்னாகவும் இருக்கும். 
  • இந்த நிலக்கரி சுரங்கங்கள் ஆண்டு வருமானமாக 408 கோடி ரூபாயை ஈட்டுவதுடன், 550 கோடி ரூபாய் மதிப்பிலான மூலதன முதலீட்டை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மேலும், இந்த மூன்று சுரங்கங்கள் மூலம் ஐயாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  • தற்போது 3 சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் இதுவரை அனுமதி வழங்கப்பட்ட சுரங்கங்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel