Type Here to Get Search Results !

ஜனவரி 18ம் தேதி பொது விடுமுறை?? - தமிழக அரசு அறிவிப்பு

  • தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வண்ணக் கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொம்பு செடியை கட்டி மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
  • இன்று தை பொங்கல் கொண்டாடப்படும் நிலையில் நாளை (ஜன. 16) மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி வருகிற 17ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
  • மீண்டும் 18ம் தேதி பள்ளி கல்லுாரிகள் திறக்கப்பட இருந்தன. அதேப் போல் அரசு தரப்பில் வரும் 17ம் தேதி வரை பள்ளிக் கல்லுாரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
  • இதற்கிடையே தமிழர் திருநாளை கருத்தில் வைத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என்று அனைவருக்கும் 4 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
  • இதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் விதமாக ஜனவரி 18ம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்து உள்ளது என்ற செய்தி வெளியானது. 
  • பொங்கல் பண்டிகைக்கு வார இறுதியில் விடுமுறை விடப்பட்ட நிலையில், ஜனவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என சில வதந்திகள் பரவின.
  • இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஜனவரி 18 (புதன்கிழமை) அன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை” என்றார்.
  • புதன்கிழமை பள்ளிகள் மூடப்படுவது குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்
Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel