Type Here to Get Search Results !

TNPSC 28th AUGUST 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 780 ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்
  • பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 
  • அந்த வகையில் ராணுவத்திலும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்தாண்டு டிசம்பர் மற்றும் கடந்த மார்ச் மாதம் என 2 முறை ராணுவ தளவாட உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு பாதுகாப்பு அமைச்சகம் தடை விதித்தது.
  • இந்நிலையில், தற்போது 3வது முறையாக, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அதிநவீன ரேடார் அமைப்புகள், சோனார் கருவிகள் உள்பட 780 ராணுவ உதிரிபாகங்களுக்கு இறக்குமதி தடை விதிக்கும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 
  • இதற்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த இறக்குமதி மீதான தடை அடுத்தாண்டு டிசம்பர் முதல் 2028ம் ஆண்டு டிசம்பர் வரை படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. 
  • அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த பொருட்களை ரூ.13,000 கோடியில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் உள்நாட்டு நிறுவனங்களுடன் போடப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
  • குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் சுமார் ரூ,4,400 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • குஜராத் புஜ் பகுதியில் வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி ஸ்மிருதி வன நினைவிடத்தை திறந்து வைத்தார். 2001 நிலநடக்கத்தின் போது மக்கள் வெளிப்படுத்திய உணர்வை பெருமைப்படுத்தும் பகையில் 470 ஏக்கரில் வனநினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் பாக்லோவில் இந்தியா - அமெரிக்கா சிறப்புப் படைகளின் கூட்டுப்பயிற்சி நிறைவடைந்தது
  • வஜ்ரா ப்ரஹார் 2022 எனும் இந்தியா - அமெரிக்கா  சிறப்புப் படைகளின் 13வது கூட்டுப்பயிற்சி பாக்லோவில் 2022 ஆகஸ்ட் 28 அன்று  நிறைவடைந்தது. 
  • இந்தியா - அமெரிக்கா இடையேயான இந்த வருடாந்தரப் பயிற்சி அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறுகிறது. இதன்படி 12வது பயிற்சி வாஷிங்டனில் உள்ள லெவிஸ் மெக் கார்ட் கூட்டுப் படைதளத்தில் 2021 அக்டோபரில் நடைபெற்றது.
  • ஐநா சாசனப்படி 21 நாள் நடைபெற்ற இந்தக் கூட்டுப் பயிற்சி இருநாட்டு சிறப்பு படைகளுக்கும் சிறந்த வாய்ப்பை  வழங்கியுள்ளது. இந்தப்  பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்றன.  
  • முதல் கட்டத்தில் எதிர்ப்பை முறியடிக்கும் நிலைமை,  போர் தந்திர நிலையில் சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவையும் இரண்டாவது கட்டத்தில் 48 மணி நேர மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட  பயிற்சியும்  நடைபெற்றது.
  • இந்தப் பயிற்சியின் பயன் குறித்து இரு நாடுகளின் படையணிகளும் ஆழ்ந்த திருப்தி தெரிவித்தன.  இரு அணிகளும் கூட்டு பயிற்சியோடு திட்டமிடுதல்,  பல்வேறு ஒத்திகை  நடவடிக்கைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டன.
  • தற்போதைய உலகச் சூழலில், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் உள்ள தருணத்தில் அமெரிக்க சிறப்பு படைகளுடன் வஜ்ர ப்ரஹார் பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது. 
  • இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்புப்படைகளின் பாரம்பரிய நட்புறவை இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி மேலும்  வலுப்படுத்தும். அதேபோல் இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்தும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel