Type Here to Get Search Results !

TNPSC 20th AUGUST 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

'ஸ்மார்ட் சிட்டி' முறைகேடுகள் குறித்து விசாரித்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

  • மத்திய அரசின் நிதியுதவியுடன், 2015 ஜூன் 25ம் தேதி நாடு முழுதும், 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, 'சீர்மிகு நகரம்' திட்டம் துவக்கப்பட்டது.
  • சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலுார், திருப்பூர், துாத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. 
  • இந்நகரங்களில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, நகருக்கு, 490 கோடி ரூபாய் வீதம், 5,390 கோடி ரூபாய், மத்திய அரசு ஒதுக்கியது. இதில், 3,969 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இன்னும், 1,421 கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது.மாநில அரசு, நகருக்கு தலா 500 கோடி ரூபாய் வீதம், 5,500 கோடி ரூபாய் ஒதுக்கியது.
  • இதில், 4,000 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இன்னும், 1,500 கோடி ரூபாய் தரப்பட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட 11 நகரங்களில், 644 திட்டங்களை செயல்படுத்த, 10 ஆயிரத்து 651 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இதில், 257 திட்டங்கள், 2,328 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டன.
  • அடுத்து, 7,947.50 கோடி ரூபாய் மதிப்பில், 339 திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.மீதமுள்ள பணிகளுக்கு, 'டெண்டர்' மற்றும் திட்ட அறிக்கை, தயாரிப்பு நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு மழையில், சென்னை நகரம் மிதந்தது தொடர்பாக, எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் கேள்வி எழுப்பினர். 
  • அதற்கு பதில் அளித்த முதல்வர், 'சீர்மிகு திட்டப் பணிகளை முறையாக செய்யாததே, இதற்கு காரணம். திட்டச் செயல்பாடு குறித்து விசாரிக்க, ஒரு விசாரணைக் குழு அமைக்க போகிறோம்' என்றார்.
  • அதைத் தொடர்ந்து, மார்ச் மாதம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டேவிதார் தலைமையில், ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 
  • இக்குழு, பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட, 200 பக்க அறிக்கையை, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினிடம், டேவிதார் வழங்கினார். தலைமைச் செயலர் இறையன்பு உடனிருந்தார்.

குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன்- இணைய சேவை இலவசம் - ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு 

  • ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அடுத்திய ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.
  • இந்த நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1.35 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன் களுடன் 3 ஆண்டுகளுக்கு இணைய சேவை இலவசம் என அறிவித்துள்ளது. ரூ.12000 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு ஏலம் புதன் கிழமை முதல் நடந்து வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel