உணவு பாதுகாப்பு - ஒடிசா முதலிடம், தமிழகத்துக்கு 9வது இடம்
- தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்து விளங்கும் மாநிலங்களை ஆண்டுதோறும் மத்திய அரசு வரிசைப்படுத்தி வருகிறது.
- 2022ம் ஆண்டுக்கான மாநில தரவரிசை குறியீட்டை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் வெளியிட்டார்.
- தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் வரிசையில், ஒடிசா முதலிடம் பெறுகிறது. உத்தர பிரதேசம் இரண்டாம் இடத்திலும், ஆந்திரா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
- இந்த தரவரிசை குறீயீட்டு பட்டியலில் தமிழகத்துக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.
நேட்டோவில் ஸ்வீடன், ஃபின்லாந்து இணைப்பு - நெறி ஆவணத்தில் உறுப்பு நாடுகள் கையொப்பம்
- நேட்டோவில் ஸ்வீடனையும் ஃபின்லாந்தையும் இணைத்துக் கொள்வதற்கான நெறிமுறை ஆவணத்தில் அதன் 30 உறுப்பு நாடுகளும் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டன.
- அதையடுத்து, அந்த ஆவணம் உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற அனுமதிக்காக அந்த நாடுகளின் தலைநகா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
- இதையடுத்து, இதுவரை அணிசாரா கொள்கைகைக் கடைப்பிடித்து வந்த ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோ அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கை மேலும் ஒரு படி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் பகுதியில் நடக்கும் 'ரிம்பாக் ஒத்திகை' - இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா, பி-8ஐ பங்கேற்பு
- பசிபிக் வளைய போர்ப்பயிற்சி ஒத்திகையான ரிம்பாக் (RIMPAC) நிகழ்வில் பங்கேற்பதற்காக, முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா போர்க்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும், ஹவாய் தீவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்திற்கு சென்றுள்ளன.
- இதில், சாத்புரா கப்பல் ஜூன் 27-ம் தேதி ஹவாயைச் சென்றடைந்த நிலையில், பி-8ஐ விமானம் ஜூலை 2-ம் தேதி ஹவாயைச் சென்றடைந்தது.
- துறைமுக வளாகத்தில் நடைபெறும் இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, கருத்தரங்குகள், விவாதங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
- இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்ள கடற்படை வீரர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியக கப்பலான யுஎஸ்எஸ் மிசோரியை பார்வையிட்டனர்.
- தொடர்ந்து யுஎஸ்எஸ் அரிசோனா நினைவிடத்தில், இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- ஆறுவார காலம் நடைபெறும் இந்தப் போர் பயிற்சியில் ஐஎன்எஸ் சாத்புரா மற்றும் ஒரு பி-8ஐ கடலோர ரோந்து விமானமும் பங்கேற்றுள்ளன.
- நட்பு நாட்டு கடற்படைகளிடையே, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் போர்ப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மொத்தம் 28 நாடுகளைச் சேர்ந்த 38 போர்க் கப்பல்கள், 9 நாடுகளின் தரைப்படையினர், 31 ஆளில்லா சாதனங்கள், 170 விமானங்கள் மற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்னனர்.
- இந்தக் கடல் ஒத்திகை ஜூலை 12- ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 4-ம் தேதி பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.