Type Here to Get Search Results !

TNPSC 10th JULY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வில்வித்தை கலப்பு அணிகள் பிரிவில் இந்திய ஜோடிக்கு வெண்கலம்

  • அமெரிக்காவின் பர்மிங்காம் நகரில் உலக விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் வில்வித்தையில் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகாஜோடி மெக்சிகோவின் ஆண்ட்ரியாபெசெரா, மிகுவல் பெசெரா ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி 157-156 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.
  • உலக விளையாட்டில் இந்தியாபதக்கம் கைப்பற்றுவது இதுவே முதன் முறையாகும். மேலும் உலகவிளையாட்டு, உலக சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை இறுதிப் போட்டி, உலகக் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் என அனைத்து நிலைகளிலும் வில்வித்தையில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அபிஷேக் வர்மா.

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் - ஜோகோவிச் சாம்பியன்

  • இங்கிலாந்தின் லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. சமீபத்தில் நுாற்றாண்டு விழா கொண்டாடிய 'சென்டர் கோர்ட்' அரங்கில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-3' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 40வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் நிக் கியரியாஸ் மோதினர். 
  • மூன்று மணி நேரம் நீடித்த பைனலில் அசத்திய ஜோகோவிச் 4-6, 6-3, 6-4, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார். விம்பிள்டனில் 7வது முறையாக கோப்பை வென்ற இவருக்கு, 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது.
  • அபாரமாக ஆடிய ஜோகோவிச், விம்பிள்டனில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை பிரிட்டனின் வில்லியம் ரென்ஷா, அமெரிக்காவின் பீட் சாம்பிராசுடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் மூவரும் தலா 7 முறை கோப்பை வென்றனர். முதலிடத்தில் 
  • சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (8 முறை) உள்ளார். 21வது கிராண்ட்ஸ்லாம்விம்பிள்டனில் அசத்திய ஜோகோவிச், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார்.
  • இவர், ஆஸ்திரேலிய ஓபனில் 9 (2008, 2011-13, 2015-16, 2019-21), பிரெஞ்ச் ஓபனில் 2 (2016, 2021), விம்பிள்டனில் 7 (2011, 2014-15, 2018-19, 2022), யு.எஸ்., ஓபனில் 3 (2011, 2015, 2018) என மொத்தம் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் பெடரர் (20 பட்டம்) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஸ்பெயினின் ரபெல் நடால் (22 பட்டம்) முதலிடத்தில் நீடிக்கிறார். 
இயற்கை விவசாய மாநாட்டில் பிரதமர் உரை
  • பிரதமர் திரு.நரேந்திர மோடி, இயற்கை விவசாயம் குறித்த மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றினார்.  குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சூரத் பகுதியில் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றி அதனை வெற்றியடையச் செய்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் இதில் தொடர்புடைய ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  இந்த மாநாட்டில் குஜராத் ஆளுனர் மற்றும் முதலமைச்சரும் கலந்து கொண்டனர். 
  • மாநாட்டில் உரையாற்றிய பிரதமர்,   அமிர்த காலத்திற்கான இலக்குகளை அடைவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டில் குஜராத் எவ்வாறு முன்னிலை வகிக்கிறது என்பதற்கு இன்றைய நிகழ்ச்சி அடையாளம் என்றார்.  
  • “ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 75 விவசாயிகளை, இயற்கை விவசாயத்துடன் இணைத்து சூரத் பெற்ற வெற்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்மாதிரியாக திகழும்“   என்று பிரதமர் தெரிவித்தார்.  
  • இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இதில்  ஊராட்சித் தலைவர்களின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel