Type Here to Get Search Results !

TNPSC 24th JULY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உலக தடகளப் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

  • 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து 22 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
  • ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் ஹரியாணாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதால், இவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
  • கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றில் தனது முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டர் தூரத்துக்கு நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்து, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
  • இந்நிலையில், நேற்று காலை நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் நீரஜ் சோப்ரா சிறப்பாகச் செயல்பட்டார். அவர் 88.13 மீட்டர் தூரம்ஈட்டி எறிந்து, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் அவர் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
  • இதே பிரிவில் கிரெனடாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார். இவர் 90.54 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து,சாதனை படைத்தார். செக். குடியரசு வீரர் ஜாக்கப் வாட்லெஜ் 88.09 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலத்தை வசப்படுத்தினார்.
  • உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்தியா ஒருமுறை மட்டுமே பதக்கம் வென்றுள்ளது. 2003-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சுபாபி ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் பதக்கம்வென்றிருந்தார். 
  • அதன்பிறகு, இதுவரை எந்த இந்தியருமே உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வெல்லவில்லை. அந்த ஏக்கத்தை 19 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்த்து, வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார் நீரஜ் சோப்ரா.
  • தற்போது தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

இரண்டாவது ஆய்வு கூடம் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. சீனா தனித்து, 'டியாங்காங்' என்ற சர்வதேச ஆய்வு மையத்தை விண்வெளியில் அமைத்து வருகிறது. 
  • இதன் பிரதான ஆய்வுக் கூடம், 'டியான்ஹி' என்றும், கூடுதலான இரண்டு துணை ஆய்வுக்கூடங்கள், 'வென்ஷியான்' மற்றும் 'மெங்ஷியான்' என்றும் அழைக்கப்படுகின்றன
  • .இதில், 'டியான்ஹி' ஆய்வுக்கூடம் கடந்த ஆண்டு ஏப்ரலில் விண்ணில் ஏவப்பட்டு ஆய்வு மையத்தில் நிலைநிறுத்தப்பட்டது. 'மெங்ஷியான்' துணை ஆய்வுக்கூடம், அக்டோபரில் விண்ணில் ஏவப்பட உள்ளது. 
  • இந்நிலையில், 'வென்ஷியான்' துணை ஆய்வுக்கூடம் விண்ணில் ஏவப்பட்டது.சீனாவின் ஹாய்னான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி மையத்தில் இருந்து 'லாங் மார்ச் 5பி ஒய்3' ராக்கெட் வாயிலாக இந்த ஆய்வுக்கூடம் விண்ணுக்கு ஏவப்பட்டது. 
  • இது வெற்றிகரமாக ஆய்வு மையத்தில் நிலை நிறுத்தப்பட்ட உடன், மையத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று விண்வெளி வீரர்கள், ஆய்வுக்கூடத்தை பரிசோதிப்பர் எனக்கூறப்படுகிறது.
  • சீனாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலைய பணிகள், இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel