Type Here to Get Search Results !

TNPSC 16th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தலைமைச் செயலாளர்களின் மாநாடு 2022

  • மத்திய அரசின் நிதி ஆயோக் சார்பில் இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் அமைந்துள்ள பிசிஏ மைதானத்தில் தலைமைச் செயலாளர்களின் 3 நாள் மாநாடு தொடங்கியது. 
  • வரும் 2047-ம் ஆண்டில் நாட்டின்100-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான தொலைநோக்கு திட்டங்கள் மாநாட்டில் வரையறுக்கப்பட உள்ளன.
  • மேலும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, நகர்ப்புற நிர்வாகம், பயிர், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவது ஆகியவை குறித்தும் மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.
  • தொழில் தொடங்க ஏதுவான சூழல், அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வது, பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் மூலம் நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றுவது, மத்திய - மாநில அரசுகளுக்கான உறவை வலுப்படுத்துவது குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
  • மாநாட்டின் 2-ம் நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். இன்றும் அவர் மாநாட்டுக்கு தலைமை வகிக்கிறார். பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்து மாநாட்டில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

அக்னிபத் திட்டத்தில் வீரர்களுக்கான வயது உச்சவரம்பு 23 ஆக அதிகரிப்பு

  • நம் ராணுவத்தில், 'அக்னி வீரர்'கள் என்ற புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அக்னிபத் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது . 
  • இதையடுத்து, 'இத்திட்டத்தால் முப்படைகளில் உள்ள படைப்பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.நான்கு ஆண்டுகளுக்குப் பின், இவர்களில் 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் அக்னிபத் திட்டத்தில் வீரர்களுக்கான வயது உச்ச வரம்பு 21ல் இருந்து 23 ஆக அதிகரிகப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 
  • நான்கு ஆண்டுகளுக்குப் பின், அக்னி வீரர்களில் திறன் மிக்கோருக்கு மட்டுமே, முப்படைகளில் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும். இந்த திட்டம், பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 
ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு
  • ஆசியான் எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு, புதுடில்லியில் நேற்று துவங்கி இரண்டு நாட்களுக்கு நடக்கிறது.
  • இதில் இந்தோனேஷியா, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ், புரூனே, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், கம்போடியா, மலேஷியா, மியான்மர் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். 
  • இதற்கிடையே, ஆசியான் கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். அப்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்தியாவில் தொற்று ஆய்வுக்குஅமெரிக்கா ரூ.915 கோடி உதவி

  • அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உலக நாடுகளில் தொற்று நோய் தடுப்பு கட்டுப்பாடு உள்ளிட்ட ஆய்வுகளுக்கு நிதியுதவி செய்கிறது.
  • இந்த மையம், இந்தியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு, தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, 915 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
  • இதன்படி, டில்லியில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் புனேவின் தேசிய வைரஸ் ஆய்வு மையம் சென்னையில் உள்ள தேசிய தொற்று நோயியல் மையம் ஆகிய முன்றும், அமெரிக்க நிதியுதவியை பெற உள்ளன.
  • கொரோனா வைரஸ் பல்வேறு வகையில் உருமாறி, அதிக வீரியமுள்ள வைரசாக மாறி பரவி வருகிறது. இத்தகைய வைரஸ்களை எதிர்கொள்ள, தடுக்க தேவைப்படும் ஆய்வுகளுக்கு, இந்த நிதி பயன்படுத்தப்படும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, இரண்டு மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,043.32 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல்
  • 2021-22-ம் ஆண்டில், வறட்சியால் பாதிக்கப்பட்ட இரண்டு மாநிலங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக நிதியுதவி அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இரண்டு மாநிலங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ரூ.1,043.32 கோடி, ராஜஸ்தான் - ரூ.1,003.95 கோடி, நாகலாந்து  - ரூ.39.28 கோடி
  • இந்த கூடுதல் நிதியுதவியானது, ஏற்கனவே மாநில அரசுகளிடம் உள்ள மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமாக உள்ளது.
  • 2021-22-ம் நிதியாண்டில், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 28 மாநிலங்களுக்கு ரூ.17,747.20 கோடியும், 11 மாநிலங்களுக்கு ரூ.7,342.30 கோடியும் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel