அதிவேக ஆர்ஆர்டிஎஸ் ரயில் பெட்டிகள் அறிமுகம்
- ரயில்வேயை அதிநவீனமாக்கும் முயற்சிகளில் ஒன்றாக, அதிவேக ஆர்ஆர்டிஎஸ் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில் டெல்லியில் இருந்து உபியின் மீரட் வரை முதற்கட்டமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இது அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. சராசரியாக 100 கிமீ வேகத்தில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் இந்த ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது மெட்ரோ ரயிலை விட 3 மடங்கு வேகத்தில் செல்லும்.
- இந்த ரயில் பெட்டிகளில் வைபை வசதி, விசாலமான நிற்கும் இடம், குஷன் இருக்கைகள், சிசிடிவி கேமரா, லேப்டாப், மொபைல் சார்ஜிங் வசதி, வழித்தட மேப்கள் என பன்முக அம்சங்கள் இடம் பெறுகின்றன.
- இந்த ரயில்பெட்டிகள் குஜராத்தின் சவ்லி பகுதியில் உள்ள அல்ஸ்டோம் ஆலையில் தயாரிக்கப்படுகிறது. தற்போது இதன் முதல் பெட்டி தயாரிக்கப்பட்டு, தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்து கழகத்திடம் வழங்கப்பட்டது.
- இந்த ரயில் பெட்டிகள் கன்டெய்னர்கள் வழியாக காஜியாபாத் ரயில்வே டெப்போவிற்கு கொண்டு வரப்படும். இந்த ரயில் பெட்டிகள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் நியமனம்
- உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை 34. இதில் 2 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருந்தது.
- இந்நிலையில் அசாமின் கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதன்ஷூ துலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பர்திவாலா ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமயிலான கொலிஜியம் இரண்டு நாட்களுக்கு முன் பரிந்துரை செய்திருந்தது.
- கொலிஜியம் பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக சுதன்ஷூ துலியா மற்றும் பர்திவாலா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இது தொடர்பாக அறிக்கையை ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட 34 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் அடுத்த வாரம் பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
5 ஆயிரம் மீட்டர் பிரிவில் இந்திய தடகள வீரர் புதிய சாதனை
- டோக்கியோ ஒலிம்பிக்கில் 1500மீ தங்கம் வென்ற நார்வே தடகள வீரர் ஜாகோப் இங்க்ப்ரிக்ட்சன் 13:02.03 வினாடிகளில் இலக்கை எட்டி இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றார்.
- அமெரிக்காவின் சான் ஜுவான் கேபிஸ்டிரேனோ நகரில் நடந்த தடகள போட்டியில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சேபிள் கலந்து கொண்டார். அவர் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் 13:25.65 நிமிடங்களில் பந்தய தொலைவை கடந்து புதிய சாதனை படைத்து உள்ளார்.
- கடந்த 1992ம் ஆண்டில் பகதூர் பிரசாத் என்ற இந்தியர் 13:29.70 நிமிடங்களில் இலக்கை அடைந்து இருந்ததே சாதனையாக இருந்தது. அதற்கு பின்னர் இந்தியர் யாரும் இதனை முறியடிக்கவில்லை.
- இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு சேபிள் இந்த சாதனையை முறியடித்து வரலாறு படைத்து இருக்கிறார்.
- மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை ஊக்குவிப்பதன் வாயிலாக, கார்பன் சமநிலை பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா-வின் வழிகாட்டுதலின்பேரில், மத்திய ரிசர்வ் காவல் படை(CAPFs) மற்றும் தேசிய பாதுகாப்புப் படை (NSG) வளாகங்களில், சூரியசக்தி மின்சார உற்பத்தி சாதனங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
- இதன்படி, புதுதில்லியில், மத்திய உள்துறை மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை செயலாளர்கள் முன்னிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய சூரியசக்தி மின்சார உற்பத்திக் கழகம்(SECI) இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.
- இந்த ஒப்பந்தம், மேற்கூரை சூரியசக்தி மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணியை,இருதரப்பும் கூட்டாக மேற்கொள்ள வகை செய்கிறது.
- தற்போதைய தரவுகளின்படி, மத்திய ரிசர்வ் காவல்படை & தேசிய பாதுகாப்புப் படை வளாகங்களில், மொத்தம் 71.68மெகாவாட் அளவிற்கு சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, இந்திய சூரியசக்தி மின்சார உற்பத்திக் கழகம் மதிப்பீடு செய்துள்ளது.
- சூரியசக்தி மின்உற்பத்தித் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள இந்திய சூரியசக்தி மின்சார உற்பத்திக் கழகம், நேரடியாகவோ அல்லது முகமைகள் மூலமாகவோ அல்லது ஏலப்போட்டி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமைகள் வாயிலாகவோ, மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதில் உள்துறை அமைச்சகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும்