கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- பக்கவிளைவுநோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினரான, டாக்டர் ஜேக்ப் புலியெல், தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் தொடர்பான தகவல்களை வெளியிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- இந்த வழக்கு, விளம்பரத்துக்காகவும், மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கத்திலும் தொடரப்பட்டுள்ளதாக, தடுப்பூசியை தயாரிக்கும் 'பாரத் பயோடெக், சீரம் இந்தியா' நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டது.
- இதை விசாரித்த நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது தனிநபர்கள், தங்கள் உடல் தொடர்பான முடிவுகள் எடுக்கும் உரிமையை, அரசியல் சாசனம் வழங்கியுள்ளது.
- அதனால், தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. தொற்று பாதிப்பு குறைவாக இருக்கும் வரையில், தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது.
- ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும்.தடுப்பூசியை போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த தகவல்களை மக்கள் அறியும் வகையில் பொது தளத்தில் வெளியிட வேண்டும்.
காணொலி மூலம் கனடாவில் படேல் சிலையை திறந்து வைத்தார்
- நடப்பு 2022-ம் ஆண்டில் பிரதமர் மோடி முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இதற்காக ஞாயிற்றுக்கிழமை அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
- ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க், பிரான்ஸ்நாடுகளுக்கும் அவர் செல்கிறார்.3 நாடுகளுக்குச் செல்லும் பிரதமர்மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல் என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
- மேலும் சர்வதேச தொழில்துறை தலைவர்கள் 50 பேருடன் அவர் கலந்துரையாட உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.
- கனடா நாட்டின் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற சர்தார் வல்லபபாய் படேல் சிலை திறப்பு விழாவில் ஜெர்மனியில் இருந்தபடி காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
கீழடியில் சுடுமண் பொம்மை கண்டெடுப்பு
- அகழாய்வில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு பணி நடக்கிறது. இதுவரை நீள்வடிவ தாயகட்டை, பாசி மணிகள், சுடுமண் காதணிகள், நெசவு தக்கழிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடக்கும் 8 வது கட்ட அகழாய்வில் அழகிய தலையலங்காரத்துடன் கூடிய சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது.
வேளாண் சூழலியல், இயற்கை வளங்களுக்கான நீடித்த மேலாண்மை இந்தியா - ஜெர்மனி இடையே கூட்டு பிரகடனம்
- வேளாண் சூழலியல் மற்றும் இயற்கை வளங்களுக்கான நீடித்த மேலாண்மையில் இந்தியா- ஜெர்மனி இடையே பல்வேறு முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- அந்தவகையில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்வெஞ்சா சுல்சேவும், காணொலி வாயிலாக பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
- இந்த கூட்டு ஆராய்ச்சி, இரு நாடுகளையும் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், விவசாயிகளிடையே, அறிவாற்றலை பகிர்ந்து கொள்ளுதல், புதுமை முயற்சிகள் ஊக்குவிக்கப்படும். தொழில்நுட்ப மாற்றம், அறிவியல் ஆற்றல் ஆகியவை, பரிமாற்றங்கள், ஒத்துழைப்புகள் மற்றும் தனியார் துறை உடனான கூட்டு ஆராய்ச்சி போன்றவை ஊக்குவிக்கப்படும்.
- இந்தத் திட்டத்தின் கீழ் 2025-க்குள் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பாக, ஜெர்மன் அரசின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் 300 மில்லியன் யூரோக்களை வழங்கும்.
பசுமை, நிலைத்தன்மை வளர்ச்சியில் ஒப்பந்தம் - இந்தியா, ஜெர்மனி பிரதமர்கள் கையெழுத்து
- பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 3 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக இன்று (திங்கள்கிழமை) ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார் பிரதமர் மோடி.
- பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் சோல்ஸ் வரவேற்றார். இதன்பிறகு, இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- பேச்சுவார்த்தையின்போது, இந்தியா, ஜெர்மனி இடையிலான ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சி குறித்து உரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- பேச்சுவார்த்தையின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் சோல்ஸ் ஆகியோர் பசுமை மற்றும் நிலைத்தன்மை ஆற்றல் கூட்டமைப்பில் கையெழுத்திட்டனர்.
பிரதமர் ஆலோசகராக மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரி தருண் கபூர் நியமனம்
- நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் அலுவலக ஆலோசகராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தருண் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- 1987 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., கேடரான இவர் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் செயலராகவும், இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.