வெம்பக்கோட்டை அகழாய்வில் புகைபிடிப்பான் கருவி கண்டெடுப்பு
- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
- அகழாய்வில் மீண்டும் டெரகோட்டா களிமண்ணாலான புகைபிடிப்பான் கருவி கிடைத்துள்ளது. இது அழகிய கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு ரூ.30.307 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்
- ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின் 596வது கூட்டம் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலைமை, உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்கள் மற்றும் சமீபத்திய புவிசார் அரசியல் முன்னேற்றங்களின் தாக்கம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
- மேலும் 2021-2022-ம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக (Dividend amount) ரூ. 30 ஆயிரத்து 307 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது. ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத் தொகையை வழங்கி வருகிறது.
- இந்த ஈவுத்தொகை என்பது, ரிசர்வ் வங்கி சந்தை நடவடிக்கைகள், முதலீடுகள், பணம் அச்சிடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதிலிருந்து கிடைக்கிற உபரித்தொகை அல்லது லாபம் இவற்றிலிருந்து மத்திய அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஈவுத்தொகையாக ரிசர்வ் வங்கி வழங்கும்.
- இதேபோல் 2020-2021 ம் நிதியாண்டிற்கான ஈவுத்தொகையாக சுமார் ரூ. 99 ஆயிரத்து 122 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிமாற்றம் செய்திருந்தது.
வரலாற்றில் முதல்முறை - ரூ.1,100 கோடிக்கு ஏலம் போன பென்ஸ் கார்
- கடந்த மாதம் 1955 ஆண்டில் தயாரிக்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் வகைக் காரை கனடாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏலத்தில் விட்டதில் 143 மில்லியன் டாலருக்கு(ரூ.1,100 கோடி) பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வாங்கியுள்ளார்.
- இந்தத் தொகையால் உலக வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட கார் என்கிற சாதனையையும் இந்தக் கார் படைத்துள்ளது.
- மேலும், 1955 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டு மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் வகைக் கார்களில் இதுவும் ஒன்று என்பதும் உலகப் புகழ்பெற்ற கார்பந்தய வீரரான ஜுவன் மானுவல் ஃபாங்கியோ இந்தக் காரை பயன்படுத்தி உலக சாம்யியன் பட்டத்தை வென்றதும் கூடுதல் தகவல்கள்.