Type Here to Get Search Results !

TNPSC 17th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

  

பி.எஸ்.எப்., படையில் 9,550 வீரர்கள் சேர்ப்பு

  • நம் நாட்டில் சி.ஏ.பி.எப்., எனப்படும் மத்திய ஆயுத காவல் படையின்கீழ், பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்புப் படை, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட ஏழு படைப் பிரிவுகள் உள்ளன.
  • இதில் இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இந்தியா - வங்கதேசம் எல்லை பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் பி.எஸ்.எப்., படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இவர்கள், எல்லை பகுதியில் அத்துமீறி நுழையும் பயங்கரவாதிகளை ஒடுக்குவது, போதைப் பொருள் கடத்தலை தடுப்பது ஆகிய பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
  • பி.எஸ்.எப்., படையில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், ஏப்ரல் 13 வரையிலான மூன்றரை மாதங்களில், 9,550 பேர் இணைந்துள்ளனர். இதில், 1,700 பேர் பெண்கள். வரும் நாட்களில் பயிற்சி முடிக்கும் மேலும் சில வீரர் வீராங்கனையரும் படையில் இணைக்கப்பட உள்ளனர்.

இந்தியாவில் சிறு விவசாயிகள் வருமானம் 10% உயர்கிறது - உலக வங்கி அறிக்கை

  • இந்தியாவில் வறுமை பற்றிய உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கையில், அதிக அளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளுடன் ஒப்பிடும் போது, சிறியளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு 10 சதவீதம் வளர்ச்சியடைவதாக கூறியுள்ளனர்.
  • அதிகளவு நிலம் வைத்துள்ளவர்களின் வருமானம் 2 சதவீதமே அதிகரிக்கிறதாம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் வறுமை குறைந்துள்ளது ஆனால் முன்பு நினைத்த அளவு இல்லை என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. 
  • உலக வங்கியின் இந்த ஆய்வறிக்கையினை பொருளாதார வல்லுனர்கள் சுதிர்தா சின்ஹா ராய் மற்றும் ராய் வேன் டெர் வைட் எழுதியுள்ளனர். 
  • இந்த ஆய்வறிக்கைகளின் நோக்கம் வளர்ச்சி குறித்த கருத்து பரிமாற்றத்தை ஊக்குவிப்பது மற்றும் ஆய்வு கண்டுபிடிப்புகளை விரைவாக பரப்புவது ஆகும். 
  • கடந்த வாரம் வெளியான ஐ.எம்.எப்., அறிக்கை, இந்தியாவில் இலவச உணவு தானியத் திட்டம் 2020ல் தீவிர வறுமையை 0.86 சதவீதமாகக் கட்டுப்படுத்தியதாகக் கூறியது.
  • 2011 முதல் 2019 வரை கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமை முறையே 14.7 மற்றும் 7.9 சதவீதம் குறைந்துள்ளது. நகர்ப்புற இந்தியாவை விட கிராமப்புறங்களில் வறுமை அளவு அதிகம் குறைந்துள்ளது.
  • கிராமப்புற வறுமை 2011ல் 26.3 சதவீதமாக இருந்தது. அது 2019ல் 11.6% ஆகக் குறைந்துள்ளது. அதே சமயத்தில் நகர்ப்புற வறுமை 14.2 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாக குறைந்துள்ளது.2016ல் நகர்ப்புற வறுமை 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அது தற்செயலாக பணிமதிப்பிழப்புடன் ஒத்துப்போகிறது.
  • கிராமப்புற வறுமை 2019ல் 10 அடிப்படை புள்ளிகள் உயர்ந்தன. அது தற்செயலாக பொருளாதார மந்தநிலையுடன் ஒத்துப்போகிறது. 2013 மற்றும் 2019ல் நடந்த இரண்டு கட்ட ஆய்வில் சிறியளவு நிலம் வைத்துள்ள விவசாயிகளின் ஆண்டு வருமானம் 10 சதவீதம் வளர்ந்துள்ளது. 
  • பெரியளவு நிலம் வைத்திருப்பவர்களின் வருமானம் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel