Type Here to Get Search Results !

TNPSC 3rd MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

குவாட் அமைப்பு உச்சி மாநாடு 2022

  • இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் சேர்ந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
  • 2-வது மாநாடு செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாட்டு தலைவர்களும் நேரில் பங்கேற்றனர். இந்த நிலையில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. 
  • இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மாரிசன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
  • இந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 
  • இந்நிலையில், குவாட் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான பாதையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். 
  • பிரதமர் மோடி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்தும் அதன் முக்கிய நோக்கத்தில் குவாட் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
சர்வதேச வர்த்தக துறைக்கான ஒதுக்கீடு குறித்து நடந்த 'வெபினார்' 
  • 2022 - 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தொழில்துறை மேம்பாடு மற்றும் சர்வதேச வர்த்தக துறைக்கான ஒதுக்கீடு குறித்து நடந்த, 'வெபினார்' எனப்படும் இணைய வழி கருத்தரங்கில், பிரதமர் மோடி பங்கேற்றார்.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு பேரிடர் கூடுதல் நிதி ரூ. 1,682 கோடி

  • தமிழகம், ஆந்திரா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களுக்கு, 1,664.25 கோடி ரூபாயும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு 17.86 கோடி ரூபாயும் மத்திய அரசு தருகிறது. 
  • இந்த நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக வழங்க, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
  • ஆந்திராவுக்கு 351.43; ஹிமாச்சல் 112.19; கர்நாடகா 492.39; மஹாராஷ்டிரா 355.39; தமிழகத்துக்கு 352.85 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. புதுச்சேரிக்கு 17.86 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

முதல்வர் ஜெகனின் 3 தலைநகர் திட்டம் ரத்து ஆந்திராவின் தலைநகரம் அமராவதி மட்டும்தான் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • கடந்த 2014ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலங்கானா மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டது. அப்போது, ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகரமாக விளங்கிய ஐதராபாத், இருமாநிலங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகரமாக விளங்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
  • ஆந்திராவில் 2019ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று, முதல்வராக ஜெகன் மோகன் பதவி ஏற்றார். இவர் வந்ததும் 3 இடங்களை தலைநகராக அறிவித்தார். 
  • ராயலசீமாவில் கர்னூலில் உயர் நீதிமன்ற தலைநகராகவும், அமராவதியை சட்டசபை தலைநகராகவும், விசாகபட்டினத்தை நிர்வாக தலைநகராகவும் அறிவித்தார்.
  • இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, 700 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 'அமராவதி தலைநகருக்காகத்தான் நிலத்தை வழங்கினோம். 
  • ஆனால், அரசு தனது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாமல், 3 தலைநகர் என்று அறிவித்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,' என்று மனுவில் அவர்கள் தெரிவித்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'அமராவதியை தலைநகரமாக உருவாக்க வேண்டும். 
  • இதற்காக, ஏ.பி.சி.ஆர்.டி.ஏ. என்னும் வழிகாட்டுதல் ஆணையம் அமைக்கப்படுகிறது,' என்று உத்தரவிட்டது. ஆந்திர அரசு இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, உத்தரவுகள் பிறப்பித்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான உறவு துண்டிப்பு - ரஷ்யா

  • உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. 
  • இதனிடையே உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலடியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 
  • மேலும், அமெரிக்காவுக்கான ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி நிலையம் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
தேசிய செஸ் - அர்ஜூன் சாம்பியன்
  • உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 58-ஆவது சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் 11 சுற்றுகளின் முடிவில் அர்ஜூன், தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ், பி.இனியன் ஆகிய மூவருமே 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். 
  • இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட "டை-பிரேக்கர்'-இல் வெற்றி பெற்று அர்ஜூன் சாம்பியன் ஆனார். அவருக்கு ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
  • குகேஷ் 2-ஆம் இடமும், இனியன் 3-ஆம் இடம் பிடிக்க, நடப்புச் சாம்பியனாக இருந்த மற்றொரு தமிழரான அரவிந்த் சிதம்பரம் 8 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தார்.
  • முன்னதாக, இப்போட்டியன் மகளிர் பிரிவில் மகாராஷ்டிரத்தின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் ஆக, சாக்ஷி சித்லாங்கே 2-ஆம் இடமும், ஆந்திரத்தின் பிரியங்கா நுடாகி 3-ஆம் இடமும் பிடித்தனர்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிரணிக்கு தங்கம்
  • எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீநிவேதா, ஈஷா சிங், ருசிதா வினெர்கர் ஆகியோர் கூட்டணி 16-6 புள்ளிகள் கணக்கில் ஜெர்மனியின் ஆண்ட்ரியா கேத்தரினா ஹெக்னர், சாண்ட்ரா ரீட்ஸ், கேரினா விம்மர் கூட்டணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
  • இப்போட்டியில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
5வது ஐ.நா சுற்றுச்சூழல் கூட்டத்தில், பிளாஸ்டிக் மாசுவை குறைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் - 175 நாடுகள் ஏற்பு
  • பிளாஸ்டிக் மாசு-வை ஒழிப்பது, உலகளாவிய சுற்றுச்சூழல் சவாலாக உள்ளது.  இது குறித்து ஆலோசிக்க, ஐ.நா. சுற்றுச்சூழல் கூட்டம் நைரோபியில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடந்தது. 
  • இதில் பிளாஸ்டிக் மாசு-வுக்கு தீர்வு காணும் 3 வரைவு தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  பரிசீலனையில் உள்ள வரைவு தீர்மானங்களில் ஒன்று இந்தியா கொண்டு வந்தது ஆகும்.  
  • பிளாஸ்டிக் மாசு-வை ஒழிக்க, நாடுகள் தானாக முன்வந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற வரைவு தீர்மானத்தை இந்தியா தாக்கல் செய்தது.
  • பிளாஸ்டிக் மாசு-வை கட்டுப்படுத்தும் உலகளாவிய நடவடிக்கைக்கு, புதிய சர்வதேச சட்டரீதியான ஒப்பந்தத்துக்கு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ஒருமனதாக முடிவெடுக்க, ஐ.நா. சுற்றுச்சூழல் கூட்டத்தில் உறுப்பு நாடுகளுடன் இணைந்து இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது. 
  • நீண்ட பேச்சுவார்த்தைக்குப்பின், பிளாஸ்டிக் மாசு-வுக்கு முடிவு கட்டும் இந்தியாவின் வரைவு தீர்மானம், ஐ.நா.வின் சுற்றுச்சூழல் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்தை 175 நாடுகள் ஏற்றுக்கொண்டது வரலாற்று சிறப்புமிக்கது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel