அமெரிக்காவின் பெடெக்ஸ் சிஇஓ-வாக இந்தியர் நியமனம்
- அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச அளவில் பிரபலமான சரக்கு போக்குவரத்து நிறுவனமான பெடெக்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ராஜ்சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் தனது பணிக்காலத்தை பெடெக்ஸில்தான் தொடங்கினார். டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஐஐடிமும்பையில் வேதியியல் பொறியியல் பட்டம் பெற்றவர்.
20,000 பசுமை வீடுகள் கட்ட ரூ.299 கோடி நிதி விடுவிப்பு - தமிழக அரசு அரசாணை
- "2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில் சூரிய சக்தியால் இயங்கும் முதலமைச்சரின் பசுமை இல்லத் திட்டத்தின் (CMGHS) கீழ் டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும், எனவே, 2021-22 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தை (CMGHS) செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.299 கோடியை அரசு அனுமதித்து விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- இந்நிலையில்,ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரின் முன்மொழிவை விரிவாக ஆய்வு செய்த பிறகு, 2021-2022 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் (CMGHS) கீழ் ரூ.299 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது
தமிழக அமைச்சரவையில் முதல் மாற்றம்
- தமிழகத்தில் கடந்த 2021-ம்ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை மே.7-ம் தேதிபொறுப்பேற்றது.
- இந்நிலையில் 10 மாதங்கள் கழித்து தமிழக அமைச்சரவையில் முதல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அமைச்சரவையில் குறிப்பிட்ட இரு அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.
- முதல்வரின் பரிந்துரையின் அடிப்படையில், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வகித்து வந்த போக்குவரத்து, தேசிய போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன சட்டத்துறையானது, எஸ்.எஸ்.சிவசங்கருக்கு ஒதுக்கப்படுகிறது. அதேபோல், பிறபடுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையானது சிவசங்கருக்கு பதில் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்படுகிறது
இந்தோ - பசிபிக் திட்டத்திற்கு ரூ.16,500 கோடி ஒதுக்கீடு
- இந்தோ - பசிபிக் பிராந்திய பாதுகாப்புக்கும், அப்பகுதியில் சீனாவின் சவாலை சமாளிக்கவும், அமெரிக்கா 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பார்லி.,யில் பட்ஜெட் ஒதுக்கீடு பற்றிய அறிக்கையை தாக்கல் செய்தார்.
- வரும் 2023ம் ஆண்டில், ராணுவத்திற்கு 58 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இந்தோ - பசிபிக் கடல் பிராந்திய பாதுகாப்பு திட்டங்களுக்காக செலவிடப்படும்.
- அப்பகுதியில் சீனாவின் சவால்களை எதிர்கொள்ளும் பணிகளுக்காக கூடுதலாக 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அமெரிக்கா நீண்ட கால நட்பு நாடுகளுடன் இணைந்து, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் அமைதிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது என்றார்.
- சர்வதேச கப்பல் போக்குவரத்தில், இந்தோ - பசிபிக் கடற்பிராந்தியம், முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பகுதியில் இருக்கும் தென் சீனக் கடல் முழுதும், தனக்கே சொந்தம் என சீனாவும் இதில் தங்களுக்கும் பங்கு உள்ளதாக தைவான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, வியட்னாம் நாடுகளும் கூறுகின்றன.
- தென் சீனக் கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கு ராணுவ தளம் அமைப்பதில், சீனா ஈடுபட்டு வருகிறது. இதற்காகத் தான், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை ஏற்படுத்த, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து, 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன.
மதுரை காமராஜ் பல்கலை புதிய துணை வேந்தர் குமார்
- மதுரை காமராஜ் பல்கலை துணை வேந்தராக, பேராசிரியர் குமாரை நியமனம் செய்து, கவர்னர் ரவி உத்தரவிட்டார். இதற்கான ஆணையை அவரிடம் வழங்கினார்.மூன்று ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார்.
- புதிய துணை வேந்தர் குமார், அண்ணா பல்கலையில் இயற்பியல் புலத்தின் படிக வளர்ச்சி எனப்படும், 'கிரிஸ்டல் குரோத்' துறை தலைவராகப் பணியாற்றி வந்தார். பல்கலைகளில் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகளை வலுப்படுத்தும் திட்ட அதிகாரியாக உள்ளார்.
3 தீவுகளில் மின் திட்டங்களை அமைப்பது உட்பட இந்தியா இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இந்தியா தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறது. இதற்கிடையே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோரை ஜெய்சங்கர் தனித்தனியாக சந்தித்து பேசினார்.
- இதைத் தொடர்ந்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் உடனான சந்திப்பில், இந்தியா, இலங்கை இடையேயான 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- இந்தியாவில் ஆதார் அட்டை போல், இலங்கையில் தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மானியத்தை வழங்குவதாகவும், யாழ்ப்பாணத்திற்கு அப்பால் 3 தீவுகளில் நவீன மின் திட்டங்களை செயல்படுத்தவும், மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்தவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- ஆபரேஷன்கள் ரத்து இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
- இத்தகவல் கவலை அளிப்பதாக தெரிவித்த வளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு மருந்துகள் அளிப்பது உள்ளிட்ட எந்தெந்த வழிகளில் உதவ முடியும் என்பதை இலங்கை அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும்படி இலங்கைக்கான இந்திய தூதருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அஸ்ஸாம் - மேகாலயாவின் 50 ஆண்டு எல்லைப் பிரச்சனையை தீர்க்கும் வரலாற்று ஒப்பந்தம்
- மேகாலயாவுக்கும், அண்டை மாநிலமான அசாமிற்கும் இடையே கடந்த 1972ஆம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு மாநில எல்லையோரம் அமைந்துள்ள 36 கிராமங்களை மேகாலயா அரசு உரிமை கோரியது. எனினும் அதற்கு அசாம் மாநில அரசு ஏற்க மறுத்தது.
- இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரு மாநில அமைச்சர்கள் தலைமையில், குழுக்கள் அமைக்கப்பட்டு எல்லையை வரையறுக்கும் பணிகள் நடைபெற்றன.
- இதற்கான வரைவு தீர்மானம் ஒன்றை இரு மாநில முதலமைச்சர்களும் கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி வைத்தனர். அதன் மீது ஆய்வு மற்றும் பரிசீலனை நடைபெற்றது.
- இந்த நிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மேகாலயா முதல்வர் கான்ட்ராட் சங்மா இருவரும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பிரச்னைக்கு தீர்வு காண ஒப்புதல் தெரிவித்து, அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
- அதன்படி, இரு மாநிலங்களுக்கு இடையே 884 புள்ளி 9 கிலோ மீட்டர் தொலைவிலான எல்லையில் இருக்கும் 12 இடங்களில், 6 பகுதிகளில் பிரச்னைக்கு தீர்வு காண வழி ஏற்பட்டுள்ளது.
- இவ்விவகாரத்தில் உள்ள 36.79 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியில் அசாமிற்கு 18.51 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியும், மேகாலயாவுக்கு 18.28 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியும் பிரித்து எடுத்துக் கொள்ளப்படும்.