ரஷ்யாவின் போருக்கு எதிராக ஐநாவின் அவசர பொது சபை கூட்டம்
- ரஷ்யாவின் போருக்கு எதிராக ஐநாவின் இந்த அவசர பொது சபை கூட்டம் கூட்டப்பட்டது. உலக வரலாற்றில் 11வது முறையாக இப்படி அவசர ஐநா பொதுச்சபை கூட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் - ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
- ஐநாவின் 77 வருட வரலாற்றில் இப்படி ரஷ்யா - உக்ரைன் விவகாரம் தொடர்பாக இரண்டாவது முறை அவசர கூட்டம் நடக்கிறது. இதற்கு முன் கிரிமியா விவகாரத்தில் இப்படி அவசர கூட்டம் நடைபெற்றது.
- நடந்த கூட்டத்தில் ஐநா பொதுச்செயலாளர் ஆண்டடேனியோ குட்ரேஸ் ரஷ்யா மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். உக்ரைனில் நடக்கும் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச விதிகளை ரஷ்யா மதிக்க வேண்டும்.
- ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகளின் பொருளாதாரம் ஏற்கனவே மோசமாக உள்ளது. போதும். இதற்கு மேல் மக்கள் பலியாக வேண்டாம். இதற்கு மேல் உலக நாடுகள் பாதிக்க வேண்டாம். வீரர்கள் உடனே தங்கள் எல்லைக்கு செல்ல வேண்டும்.
- தலைவர்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுகுறிப்பிட்டார். 193 நாடுகள் உள்ள ஐநா பொது சபையில் இனி வரும் நாட்களில் வரிசையாக ஒவ்வொரு நாடுகளும் பேசும்.
- அதன்பின் புதன் கிழமை ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக வாக்கெடுப்பு நடக்கும். அதில் பெரும்பாலும் 100க்கும் அதிகமான நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செபி தலைவராக மாதாபி நியமனம்
- இந்திய பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இருந்த அஜய் தியாகியின் 5 ஆண்டு கால பதவிக் காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது.
- செபி தலைவராக 3 ஆண்டு காலத்துக்கு அவர் 2017 மார்ச் மாதம் பதவியேற்றார். அதன் பிறகு, ஆகஸ்ட் 2020 வரை 6 மாதங்கள் பதவி நீட்டிப்பு பெற்றார். பின்னர், 18 மாதங்கள் அவரது பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
- இதையடுத்து, அதன் புதிய தலைவராக மாதாபி பூரியை நியமித்து ஒன்றிய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. செபிக்கு பெண் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும். இவரது நியமனத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- இவர் செபியில் உள்ள பல்வேறு கமிட்டிகளின் தலைவராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உள்ளார். கடைசியாக, பத்திரங்கள் சந்தையின் தரவு அணுகல் மற்றும் தனியுரிமை தொடர்பான ஆலோசனை கமிட்டியின் தலைவராக பணி புரிந்தார்.
உக்ரைன்-ரஷியா பேச்சுவாா்த்தை
- உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை தாக்குதலைத் தொடங்கியது. ஏவுகணைகள், ராக்கெட் குண்டுகள், போா் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதுடன் ரஷிய தரைப் படையும் உக்ரைனுக்குள் ஊடுருவியது. இந்நிலையில், உக்ரைனுடன் பேச்சுவாா்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
- அதன்படி, பெலாரஸ் எல்லையில் பேச்சுவாா்த்தை தொடங்கியது. உக்ரைன் தரப்பில் அதன் பாதுகாப்பு அமைச்சா் தலைமையிலான குழுவும், ரஷிய தரப்பில் அதிபா் புதினின் ஆலோசகா் தலைமையிலான குழுவும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றன.
- கூட்டத்தில், உக்ரைனிலிருந்து ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 5 மணி நேரப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான சில வாய்ப்புகள் தென்பட்டதாக ரஷிய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியனில் சேர உக்ரைன் விண்ணப்பம்
- 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விண்ணப்பத்தில் உக்ரைன் பிரதமா், அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவரும் கையொப்பமிட்டுள்ளனா்.
- இந்த விண்ணப்பம் ஐரோப்பிய யூனியன் தலைமைகம் அமைந்துள்ள பிரஸல்ஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்று அதிபா் வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி - பிரதமர் மோடி
- பிரதமரின் கதி சக்தி திட்டம் தொடர்பான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பிரதமரின் கதி சக்தி திட்டம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் எனக் கூறினார்.
- தரமான கட்டமைப்புகளை கட்டுவதற்கான வழிகளை ஆராய வேண்டும் என்றும், அது விலை மலிவாக இருப்பதோடு, பேரழிவுகளை தாங்கும் வகையில் நீடித்து நிற்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
- ஒருங்கிணைந்த கூட்டாட்சியை வலுப்படுத்த ஏதுவாக மாநில அரசுகளுக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், பன்முனை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகள் இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
- நெடுஞ்சாலைகள், கண்ணாடி ஒளியிழை குழாய் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்பட ஒவ்வொரு துறைகளிலும் முதலீடுகளை அதிகரிக்க அரசு முடிவு எடுத்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
மத்திய அரசின் பசுமை எரிசக்தி நோக்கங்கள் மற்றும் கார்பன்-சமநிலைப் பொருளாதார முயற்சிகளை நனவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் - சூரிய மின்சக்தி நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் கையெழுத்து
- மத்திய அரசின் பசுமை எரிசக்தி நோக்கங்கள் மற்றும் கார்பன்-சமநிலைப் பொருளாதார முயற்சிகளை நனவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சூரிய மின்சக்தி நிறுவனம்(எஸ்இசிஐ) , இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுனம் (எச்பிசிஎல்) ஆகியவை கடந்த 24ம் தேதி கையெழுத்திட்டன.
- நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் மேம்பாடு மற்றும் மின்சார வாகனப் போக்குவரத்துக்கு வேகமாக மாறும் மத்திய அரசின் நோக்கத்திற்கு ஏற்ப, எச்பிசிஎல் நிறுவனம் இத்துறைகளை மேலும் பன்முகப் படுத்தவும், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் திட்டங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
8 முக்கியத் தொழில்துறைகளின் இணைந்த வளர்ச்சிக் குறியீடு கடந்த ஜனவரியில் 3.7 சதவீதம் அதிகரிப்பு
- எட்டு முக்கியத் தொழிற்துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக் குறியீடு கடந்த ஜனவரியில் 144.4 புள்ளிகளாக இருந்தது. இது கடந்த 2021 ஜனவரி மாத பட்டியலுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி 3.7 சதவீதம்(தற்காலிகம்) அதிகரித்துள்ளது.
- நிலக்கரி, இயற்கை வாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், ஸ்டீல், சிமென்ட் மற்றும் மின்சாரத்துறைத் தொழில்களின் வளர்ச்சி கடந்த ஜனவரி மாதத்தில், கடந்தாண்டின் இதே காலத்தை விட அதிகரித்துள்ளது.
- 8 முக்கியத் தொழிற் துறைகளின் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் இறுதி வளர்ச்சி வீதம் 8.7 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. முக்கிய தொழிற்துறைகளின் வளர்ச்சி வீதம் கடந்த 2021-22ல் 11.6 சதவீதமாக இருந்தது.