Type Here to Get Search Results !

TNPSC 22nd MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வீடுகளின் விலை அதிகரிப்பு - உலக பட்டியலில் இந்தியாவுக்கு 51-ஆவது இடம்

  • உலக அளவில் வீடுகளின் விலை அதிகரிப்பு பட்டியலில் இந்தியா 2.1 சதவீதத்துடன் 51-ஆவது இடத்தில் இருப்பதாக சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் ஃப்ராக் தெரிவித்துள்ளது.
  • உலக அளவில் மிக முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அதிகரித்து வருகிறது.
  • இந்தப் பட்டியலில் கடந்தாண்டு அக்டோபா்-டிசம்பா் காலாண்டு நிலவரப்படி 59.6 சதவீத விலை அதிகரிப்புடன் துருக்கி முதலிடத்தில் உள்ளது. ஆண்டின் அடிப்படையில் இங்கு வீடுகளின் விலை மின்னல் வேகத்தில் உயா்ந்துள்ளது.
  • அதற்கு அடுத்தபடியாக, நியூஸிலாந்து (22.6%), செக் குடியரசு (22.1%), ஸ்லோவேக்கியா (22.1%), ஆஸ்திரேலியா (21.8%) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா 2.1 சதவீத உயா்வுடன் இப்பட்டியலில் 51-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • கடந்த 2021-இல், மலேசியா, மால்டா, மொரக்கோ நாடுகளின் சந்தைகளில் வீடுகளின் விலை முறையே 0.7%, 3.1% மற்றும் 6.3% குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனா - பாகிஸ்தான் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்து

  • பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு நடக்கிறது. 
  • இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை பாக். வெளியுறவு அமைச்சர் குரேஷி அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று மாநாட்டில் வாங் யி பங்கேற்றுள்ளார்.
  • இந்நிலையில் இஸ்லாமாபாதில் பாக் - சீன வெளியுறவு அமைச்சர்கள் தனியாக சந்தித்துப் பேசினர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
  • இதன்பின் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் 'சீன - பாகிஸ்தான் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்த ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 
  • ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்பட இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டது' என கூறப்பட்டுள்ளது.

ஒன்றிய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை - யுஜிசி உத்தரவு

  • நாடு முழுவதும் 45 ஒன்றிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 14 பல்கலைக்கழகங்கள் தவிர பிற பல்கலைக்கழங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மாநில கல்வி வாரியங்கள் நடத்தும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டன.
  • இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு (சியுஇடி) மூலம் மட்டுமே ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். 
  • இளநிலைப் படிப்பில் சேர்வதற்கான கட்டாய பொது நுழைவுத் தேர்வு, ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நுழைவுத் தேர்வை இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பெங்காலி, பஞ்சாபி, அசாமி, ஒடியா உள்ளிட்ட 13 மொழிகளில் தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது. 
  • நாட்டில் உள்ள அனைத்து ஒன்றிய பல்கலைக்கழகங்களும் இந்தக் கல்வியாண்டு முதல், பொதுவான நுழைவுத் தேர்வின் மூலம் மட்டுமே மாணவர்களைச் சேர்க்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
  • தேர்வு எழுதுபவர்களுக்கு 27 பாடங்கள் அளிக்கப்படும். அதில் ஆறு பாடங்களைத் தேர்வுசெய்து பதிலளிக்க வேண்டும். மூன்றாவது பிரிவில் பொது அறிவுக் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். 
  • இந்த பொது நுழைவுத் தேர்வு முன்பே இருப்பதுதான். ஆனால், இதுவரை 14 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இதனை பின்பற்றி வந்தன. புதிய கல்விக் கொள்கையின் கீழ் எல்லா மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய - உஸ்பெகிஸ்தான் கூட்டுப் பயிற்சி

  • இந்தியா - உஸ்பெகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையேயான மூன்றாவது கூட்டுப் பயிற்சி மார்ச் 22 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • இந்திய ராணுவத்தின் குண்டு வீசும் படைப்பிரிவை உள்ளடக்கிய வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இதற்காக இன்று உஸ்பெகிஸ்தானின் யாங்கியாரிக் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனர். 
  • இத்தகைய பயிற்சி கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரகண்டில் நடைபெற்றது.
  • இரு தரப்பு ராணுவத்தினரும் பயிற்சியின்போது நடைமுறை உத்திகளை பகிர்ந்து கொள்வதும், பின்னர் சிறந்த நடைமுறைகளை கற்றறிவதும் இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கமாக உள்ளது.

தில்லி மாநகராட்சி திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தில்லி மாநகராட்சியை ஒன்றிணைக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
  • தொடர்ந்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அடுத்த வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த மசோதா மூலம், தில்லியில் உள்ள வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று மாநகராட்சிகளையும் ஒன்றிணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய முதலீட்டுக் கொள்கை 2012-ஐ இந்துஸ்தான் உர்வாரக் மற்றும் ராசயான் நிறுவனத்தின் மூன்று அலகுகளுக்குப் பொருந்துவதை நீடிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • புதிய முதலீட்டுக் கொள்கை 2012-ஐ இந்துஸ்தான் உர்வாரக் மற்றும் ராசயான் நிறுவனத்தின் (எச்யுஆர்எல்) மூன்று அலகுகளுக்கு அதாவது கோரக்பூர், சிந்ரி, பரவ்னி ஆகியவற்றுக்குப் பொருந்துவதை நீடிப்பதற்கான உரத்துறையின் முன்மொழிவை பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த நிறுவனத்தின் பரவ்னி அலகு ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் நிறுவு திறன் கொண்ட எரிவாயு அடிப்படையிலான புதிய யூரியா உற்பத்தியை தொடங்கி உள்ளது. 
  • மூன்று எச்யுஆர்எல் யூரியா திட்டங்களின் செலவு ரூ.25.120 கோடியாகும். இந்த மூன்று பிரிவுகளுக்கும் இந்திய எரிவாயு ஆணையம், இயற்கை எரிவாயுவை வழங்கி வருகிறது.
  • இந்த நிறுவனம் விவசாயிகளுக்கு உரத்தேவையை நிறைவு செய்வது மட்டுமின்றி இந்தப் பிராந்தியத்தில் சாலைகள், ரயில் போக்குவரத்து, துணை தொழில்கள் போன்ற கட்டமைப்பு மேம்பாட்டையும் ஊக்கப்படுத்துகிறது. 
  • மேலும் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட 7 மாநிலங்களின் உரத்தேவையை எதிர்கொள்ள உலகின் சிறந்த தொழில்நுட்பங்களுடன் மூன்று அலகுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
2022-23 ஆண்டில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு 2022-23 ஆண்டில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.  
  • வேளாண் உற்பத்திச் செலவு மற்றும் விலைக்கான  குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி 2022-23ஆம் ஆண்டில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.4,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.250 அதிகமாகும். 
  • உற்பத்திச் செலவில் இது சராசரியாக 60.53 சதவீதமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைந்தபட்சமாக 50 சதவீத லாபத்தை உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • சணல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய விலையை உறுதி செய்யும் வகையில் இந்த விலை நிர்ணய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஃபேம் இந்தியா 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 விரைவுச்சாலைகளில் 1,576 மின்னேற்றி நிலையங்கள் அமைப்பதற்கு கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல்
  • ஃபேம் இந்தியா 2-ம் கட்ட திட்டத்தின் கீழ்  25 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 68 நகரங்களில் மின்சார வாகனங்களுக்காக 2,877 மின்னேற்றி நிலையங்களை அமைப்பதற்கு கனரகத்  தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • மேலும், 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 விரைவுச்சாலைகளில் 1,576 மின்னேற்றி நிலையங்கள் அமைப்பதற்கும் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.  
  • மேலும் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டருக்கு ஒரு மின்னேற்றி நிலையமும், கனரக வாகனங்களுக்காக குறைந்தபட்சம் 100 கிலோ மீட்டருக்கு ஒரு மின்னேற்றி நிலையமும் அமைக்கப்பட வேண்டும்.  
  • நகரங்களில் குறைந்தபட்சம் 3 கிலோ மீட்டருக்கு ஒரு மின்னேற்றி நிலையமும் அமைக்கப்பட வேண்டும்.
  • ஃபேம் இந்தியா முதல் கட்ட திட்டத்தின் கீழ் ரூ.43 கோடி செலவில் மின்சார வாகனங்களுக்காக 520 மின்னேற்றி நிலையம் அமைப்பதற்கு கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel