அமெரிக்காவில் கரோனா பரவலைத் தடுக்க இந்திய வம்சாவளி மருத்துவா் நியமனம்
- கரோனா தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளராக ஆசிஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளாா். பிகாா் மாநிலத்தில் கடந்த 1970-ஆம் ஆண்டு பிறந்த ஆசிஷ் ஜாவின் குடும்பம் கடந்த 1979-ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயா்ந்தது. அதனைத் தொடா்ந்து கடந்த 1983-ஆம் ஆண்டு அவரது குடும்பம் அமெரிக்கா சென்றது.
- ஹாா்வா்டு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியை நிறைவு செய்த அவா், பிரௌன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவ ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். அமெரிக்காவின் மருத்துவக் கொள்கைகளை வகுப்பதற்கு உதவும் முன்னணி நிபுணா்களில் ஒருவராக ஆசிஷ் ஜா அறியப்படுகிறாா்.
- இதுவரை கரோனா தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஜெஃப்ரி ஸியென்ட்ஸுக்கு பதிலாக அந்தப் பொறுப்புக்கு ஆசிஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்திய பொருளாதாரம் பாதிப்பு - பன்னாட்டு நிதியம் கணிப்பு
- போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியானது, இந்தியாவின் பொருளாதாரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் உயர்வானது, வர்த்தக அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது. இது பணவீக்கம் உயரவும், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கவும் காரணமாக அமையும்.
- இருப்பினும், இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரிப்பு, நடப்பு கணக்கில் ஏற்படும் தாக்கத்தை ஈடுகட்டும் என எதிர்பார்க்கலாம்.
- அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனப் பொருளாதாரங்கள் மீதான போரின் எதிர்மறையான தாக்கம், இந்தியாவின் ஏற்றுமதிக்கான தேவையைக் குறைக்கலாம்.
- அதே சமயம், வினியோக தடைகள் இந்தியாவின் இறக்குமதியை பாதிக்கலாம். சுருக்கமாக சொல்வதென்றால், இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரை, நிச்சயமற்ற நிலை இருப்பதாக கருதுகிறேன்.
- சீனாவை பொறுத்தவரை, போரால் அதன் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், ஒப்பீட்டளவில் சிறிதாக இருக்கும்.
மாத்ருபூமியின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
- மாத்ருபூமியின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
- செய்தித்தாளின் பயணத்தில் முன்னிலை வகிக்கும் ஆளுமைகள் அனைவருக்கும் பிரதமர் புகழாரம் சூட்டினார்.
- “மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மாத்ருபூமி இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காகப் பிறந்தது” என்று அவர் கூறினார்.
- காலனி ஆட்சிக்கு எதிராக நமது நாட்டின் மக்களை ஒற்றுமைப்படுத்த இந்தியா முழுவதும் செய்தித்தாள்களையும், பருவ இதழ்களையும் தொடங்கிய புகழ்மிக்க பாரம்பரியத்தில் பதிப்புகளை அவர் முன்வைத்தார்