Type Here to Get Search Results !

TNPSC 13th JANUARY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஐ.நா. வெள்ளிக்கிழமை வெளியிட்ட உலக பொருளாதார நிலை மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான வளா்ச்சி வாய்ப்புகள் குறித்த அறிக்கை
  • கடந்த 2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலக பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவில் 5.5 சதவீத அளவுக்கு வளா்ச்சி பெற்றது. 
  • ஆனால், அந்த ஆண்டின் இறுதியில், கரோனா பாதிப்பால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக, உலக பொருளாதார வளா்ச்சி விகிதம் சரியத் தொடங்கியது. சீனா, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்ற மிகப் பெரிய பொருளாதாரங்களும் கடும் சரிவைச் சந்தித்தன.
  • தொடா்ந்து, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலும் உலக பொருளாதார வளா்ச்சி குறைவாகவே இருக்கும். 2022-இல் உலக பொருளாதார வளா்ச்சி விகிதம் 4 சதவீத அளவிலும், 2023-இல் 3.5 சதவீத அளவிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • பெரும்பாலான வளரும் நாடுகளின் பொருளாதார வளா்ச்சி பொதுவாக பலவீனமாக இருக்கும். குறிப்பாக, சுற்றுலா துறையைச் சாா்ந்துள்ள நாடுகளில் பொருளாதார வளா்ச்சி மிக மந்தமாகவே இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருக்கு ஆலை அமைக்க அதானி - போஸ்கோ ஒப்பந்தம்
  • கவுதம் அதானி தலைமையிலான, 'அதானி குழுமம்' உருக்கு, புதிப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் வணிக வாய்ப்புகளை மேம்படுத்த, தென் கொரியாவைச் சேர்ந்த, 'போஸ்கோ' நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • குஜராத்தில் உள்ள முந்த்ராவில், பசுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ஒருங்கிணைந்த உருக்கு ஆலையை நிறுவுவது மற்றும், பிற வணிகங்களுக்கான வாய்ப்புகளை ஆராய்வது ஆகியவை சம்பந்தமாக, போஸ்கோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • குஜராத்தில் ஆலை அமைப்பது மட்டுமின்றி; புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஹைட்ர ஜன், சரக்கு கையாளல் போன்ற பல்வேறு துறைகளிலும், இரு தரப்பும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தி தந்துள்ளது.
நாடு முழுவதும் அதிகரிக்கும் கரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
  • நாடு முழுவதும் அன்றாடம் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
  • கரோனா அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு, அலுவலகங்களில் 50% பணியாளர்களுடன் வேலை எனப் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • ஏற்கெனவே நாடு முழுவதும் 15 முதல் 18 வயதில் உள்ள சிறாருக்கு தடுப்பூசி செலுத்துவதிலும், 60 வயதுக்கு மேற்பட்ட முன்களப் பணியாளர்கள், இணை நோய் கொண்டோர், முதியோர் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் போடப்பட்டு வருகிறது. 
  • மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி, தமிழகம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் கரோனா பரவல் மிகவும் அதிகமாக இருப்பதால் இந்த மாநிலங்கள் கூடுதல் கண்காணிப்பு வளையத்துக்குள் வருகின்றன.
  • இந்நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அவர் கேட்டறிந்தார்.
இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது
  • மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரம், உணவு, பொதுவிநியோகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், பிரிட்டன் நாட்டு சர்வதேச வர்த்தகத்துக்கான அமைச்சர் அன்னி –மேரி டிரவெலினுடன், புதுதில்லியில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையை தொடங்கினார். 
  • இருநாட்டு பிரதமர்கள் திரு. நரேந்திர மோடி, திரு. போரிஸ் ஜான்சன் ஆகியோர் 2021-ம் ஆண்டு முடிவு செய்த இலக்கை எட்டும் வகையிலான இந்த ஒப்பந்தம், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா-பிரிட்டன் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக்க உதவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel