Type Here to Get Search Results !

TNPSC 22nd SEPTEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சர்வதேச சைகை மொழி தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ஆம் தேதி சர்வதேச சைகை மொழி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலகம் முழுவதும் அந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
  • பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உள்ள மொழிகளில் மூத்த மொழி சைகை மொழியாகும். இந்த சைகை மொழியில் பேசிய பிறகுதான் வடிவ எழுத்துக்கள் தோன்றின என்பதும் அதன் பின்னரே அனைத்து மொழிகளும் தோன்றின என்பது குறிப்பிடத்தக்கது
  • மௌனங்களின் மொழி சைகை மொழி என்பதும் இந்த மொழிக்கு பேச்சு, எழுத்து தேவை இல்லை என்பதும் கேட்க இயலாமல் பார்வையில் மட்டுமே மனதால் மட்டுமே இந்த மொழியை புரிந்துகொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது
  • காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோர் பிறரின் உணர்வுகளை கொண்டு அவர்கள் பேசுவதையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கான மொழிதான் சைகை மொழி என்பது குறிப்பிடத்தக்கது

'பேட்ஸ்மேன்கள்' இனி 'பேட்டர்கள்' என்று மட்டுமே அழைக்கப்படுவர்

  • கிரிக்கெட் சட்டங்களை நிலைநிறுத்தும் அமைப்பான லண்டனில் உள்ள மேரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC), அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் சொற்களில் மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • MCC வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 'பேட்ஸ்மேன்' மற்றும்/அல்லது 'பேட்ஸ்மென்' என்ற சொல் அதிகாரப்பூர்வமாக பாலின-நடுநிலை வார்த்தையான 'பேட்டர்கள்' என்று மாற்றப்படும். 
  • கிரிக்கெட் வரலாற்றில் 'பேட்ஸ்மேன்/பேட்ஸ்மென்' என்ற வார்த்தைகள் 1744 முதல் பயன்பாட்டில் உள்ளன. கிரிக்கெட் விளையாட்டில் பாலினம் பாகுபாடின்றி பெண் வீரர்களுக்கு அதிக வரவேற்பு அளிக்க இந்த மாற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு
  • இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை 'வர்த்தகம் மற்றும் வணிக வாரம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
  • தமிழ்நாட்டை பொறுத்தவரை, மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "ரூ.2120.54 கோடி மதிப்பீட்டில் 24 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன. 41,695 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்.
  • சர்வதேச தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாடு ஏற்றுமதியில் 3-வது பெரிய மாநிலமாக உள்ளது. மோட்டார் வாகனங்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.
  • உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழ்நாடு தயாரிப்புகள் (made in tamilnadu) என்ற நிலை உருவாக வேண்டும். மாவட்ட ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பஞ்சுக்கான ஒரு சதவீத சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel