Type Here to Get Search Results !

TNPSC 16th SEPTEMBER 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி நீலகிரி சாதனை

  • தமிழகத்தில் அதிக பழங்குடியினர் வசிக்கும் மாவட்டமும் நீலகிரி மாவட்டம் தான். இங்கு தோடர், கோத்தர், பணியர் உட்பட 6 வகை பழங்குடியின மக்கள் 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 
  • இந்நிலையில், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை மற்றும் தன்னார்வலர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தமிழகத்திலேயே 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக நீலகிரி மாவட்டம் மாறியுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உதவியுடன் அணுசக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்

  • முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியின் முதல் பெரிய முயற்சியாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரதன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா, பிரிட்டன் உதவியுடன் அணுசக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா கட்டமைக்கவுள்ளது.
  • அமெரிக்காவில் 'க்வாட்' கூட்டமைப்பின் கூட்டம் செப். 24-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 'ஆக்கஸ்' கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
இந்தோ பசிபிக் பாதுகாப்புக்கு புதிய முத்தரப்புக் கூட்டணி - அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா கைகோத்தன
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்காக புதிய பாதுகாப்புக் கூட்டணியை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தொடங்கியுள்ளன. 'ஆக்கஸ்' என்ற பெயரிலான இக்கூட்டணி காணொலி முறையில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. 
  • இக்கூட்டணியின் கீழ் கூட்டுத் திறன்கள், தொழில்நுட்பப் பரிமாற்றம், பாதுகாப்பு, பாதுகாப்பு தொடா்பான அறிவியல், தொழில்நுட்பம், தொழில் துறை தளங்கள், விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றை மேம்படுத்த மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
விண்வெளி சுற்றுலா - 4 பேரை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்
  • உலகப் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் விண்வெளி சாா்ந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அதில் பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்புவதும் ஒன்று. அந்த வகையில் விண்வெளி வீரா்கள் அல்லாத சாதாரண பொதுமக்கள் 4 பேரை தனது ஃபால்கன் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.
  • இந்தப் பயணத்துக்கான செலவை ஐசக்மேன் (38) என்கிற அமெரிக்க தொழிலதிபா் ஏற்றுக்கொண்டுள்ளாா். விமானம் இயக்கும் பயிற்சி பெற்றுள்ள இவரே இக்குழுவின் தலைவா்.
அரசு பணிகளுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்ச வரம்பு 2 ஆண்டு உயர்வு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பு 30-லிருந்து 32 ஆக உயர்த்தப்படுகிறது.
  • தொடர்புடைய பணி விதிகளில் மேற்குறிப்பிட்ட அளவுக்கும் குறைவான வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும் தற்போது உயர்த்தப்பட்டுள்ள வயது உச்சவரம்பு அளவு பொருந்தும்.
  • இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி,எஸ்டி) மற்றும் அனைத்து வகுப்பிலும் உள்ள ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு அல்லது தளர்வுகள் தொடரும்.
வா்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. கூட்டமைப்பு (யுஎன்சிடிஏடி) 2021 அறிக்கை
  • 2021-இல் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளா்ச்சியடையும் என எதிபாா்க்கப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டு இந்த வளா்ச்சி குறையக்கூடும்.
  • ஏனெனில், கரோனா பேரிடா் பொருளாதாரத்தில் அதிக பாதிப்புகளையும், இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், தனியாா் நுகா்வு நடவடிக்கைகளில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கமும் எதிா்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
  • இவற்றை கருத்தில் கொள்ளும்போது அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியானது சரியவே அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • உலகப் பொருளாதாரம் 2020-இல் 3.5 சதவீத சரிவை சந்தித்ததற்கு பிறகு நடப்பாண்டில் 5.3 சதவீதமாக வளா்ச்சியை எட்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாராக் கடன் வங்கிக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்
  • வங்கிகளின் வாராக் கடன் வசூலுக்கு என்.ஏ.ஆர்.சி.எல்., என்ற அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்த உள்ளது. வங்கிகள் அவற்றின் வாராக் கடனை இந்த அமைப்பிடம் ஒப்படைத்து விடும். இதனால் வங்கிச் சேவைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • 30 ஆயிரம் கோடி ரூபாய்இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:வாராக் கடனை வசூலிக்கும் என்.ஏ.ஆர்.சி.எல்., நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை உத்தரவாதம் அளிக்கப்படும்.
  • என்.ஏ.ஆர்.சி.எல்., நிறுவனம், வாராக்கடன் வங்கி என அழைக்கப்படுகிறது. வாராக் கடனில் 15 சதவீதம் ரொக்கமாக வங்கிகளுக்கு வழங்கப்படும். 
  • எஞ்சிய 85 சதவீத கடனுக்கு, மத்திய அரசு உத்தரவாதத்துடன் கூடிய கடன் உறுதிப் பத்திரங்களை என்.ஏ.ஆர்.சி.எல்., வழங்கும். கடன் வசூலிப்பில் ஏற்படும் இழப்பிற்கு ஈடாக இந்த பத்திரங்கள் பயன்படுத்திக் கொள்ளப்படும்.
  • கடந்த ஆறு ஆண்டுகளில் வங்கிகளின் 5.01 லட்சம் கோடி வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், 2018 மார்ச் முதல் 3.10 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கரிபியன் லீக் டி20 - செயின்ட் கிட்ஸ் சாம்பியன்
  • மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், ட செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பைனலுக்கு தகுதிப் பெற்றன.
  • பைனலில் டாஸ் வென்று முதலில் களம் கண்ட ஆந்த்ரே பிளெட்சர் தலைமையிலான செயின்ட் லூசியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159ரன் எடுத்தது. 
  • பரபரப்பான ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் 20ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை டொமினிக், தொடர் நாயகன் விருதை ரோஸ்டன் சேஸ் ஆகியோர் பெற்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel