Type Here to Get Search Results !

TNPSC 2nd AUGUST 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

'பார்ச்சூன்' பட்டியல் - எஸ்.பி.ஐ., முன்னேறியது

  • நடப்பு ஆண்டுக்கான, 'பார்ச்சூன் குளோபல் 500' நிறுவனங்கள் பட்டியலில், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' கடந்த ஆண்டைவிட 59 இடங்கள் சரிந்து, 155வது இடத்துக்கு வந்துள்ளது.
  • அதேசமயம், எஸ்.பி.ஐ., 19 இடங்கள் முன்னேறி, 205வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் 'வால்மார்ட்' நிறுவனமும், இரண்டாவது இடத்தில் 'ஸ்டேட் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் சீனா'வும், மூன்றாவது இடத்தில் 'அமேசான்' நிறுவனமும் உள்ளது.
  • மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நிறுவனங்களின் மொத்த வருவாய் அடிப்படையில், வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

'இ - ருபீ' பண பரிவர்த்தனை வசதி துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

  • கொரோனா தொற்று பரவல் காலத்தில் இணையவழி பண பரிவர்த்தனை மேற்கொள்வது மிகவும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு யு.பி.ஐ., என்ற இணையவழி பண பரிவர்த்தனை வசதியை நடைமுறைப்படுத்தி உள்ளது. 
  • இணையவழி பண பரிவர்த்தனைக்காக, 'பீம்' என்ற மொபைல் செயலியையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த கட்டமாக பண பரிவர்த்தனையை மேலும் எளிமையாக்கும் வகையில் இ - ருபீ என்ற வசதியை பிரதமர் மோடி நடந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.
  • இ - ருபீ திட்டத்தை என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பரிவர்த்தனை கழகம், மத்திய அரசின் நிதி சேவைகள் துறை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய சுகாதார ஆணையம் இணைந்து உருவாக்கி உள்ளன.
  • இ - ருபீ என்பது டிஜிட்டல் முறையிலான பணம் செலுத்துவதற்கான, ரொக்கமில்லா, மனிதர்கள் இடையே நேரடி தொடர்பு இல்லாத புதிய முறை. இது, 'க்யூஆர்' குறியீடு அல்லது எஸ்.எம்.எஸ்., அடிப்படையிலான மின்னணுச் -சான்றாக இருக்கும். இந்த திட்டத்தின்படி பயனாளியின் மொபைல் போன் எண் மட்டுமே தேவை. 
  • அந்த எண்ணுக்கு, பயனாளிக்கான 'வவுச்சர்' எனப்படும் டிஜிட்டல் வடிவிலலான உறுதிச் சீட்டு அனுப்பப்படும்.இந்த உறுதிச் சீட்டை, தான் பெறும் சேவையை அளிக்கும் அமைப்பிடம் காட்டினால் போதும். சேவையைப் பெற்றதும், அதை பயனாளிகள் உறுதி செய்ய வேண்டும்.
  • பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் இந்த புதிய வசதியில் இணைந்துள்ளன. 

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா - கலந்துகொண்ட ஜனாதிபதி

  • தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.சென்னை மாகாண சட்டசபை 1921ல் துவக்கப்பட்டது. அதன் நுாற்றாண்டு விழா, நேற்று சட்டசபை கூட்டரங்கில் நடந்தது.
  • கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் 
எல்ஐசி நிர்வாக இயக்குநராக மினி இபே பொறுப்பேற்பு
  • எல்ஐசி நிர்வாக இயக்குநராக, மினி இபே பொறுப்பேற்றுள்ளார். மினி இபே, ஆந்திர பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதுநிலை படிப்பு படித்தவர். 1986ம் ஆண்டு எல்ஐசியில் பணியில் சேர்ந்தார். இந்த நிறுவனத்தில் இவருக்கு அதிக பணி அனுபவம் உண்டு. 
  • நிர்வாக இயக்குநராக பதவியேற்பதற்கு முன்பு, எல்ஐசி சட்டத்துறையின் செயல் இயக்குநராக பதவி வகித்தார். இந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் பொறுப்பில் முதன் முதலாக பொறுப்பேற்ற பெண் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஹாக்கியிலும் அரையிறுதிக்கு முன்னேற்றம் இந்தியா வரலாற்று சாதனை
  • ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய நிலையில், மகளிர் அணியும் வலுவான ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 
காப்பீடு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்
  • பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களான, நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகிய நான்கு காப்பீடு நிறுவனங்களையும் தனியார்மயமாக்க முடிவு செய்த மத்திய அரசு, இதுதொடர்பான சட்ட திருத்த மசோதாவை வடிவமைத்தது.
  • இந்த மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இதன் மூலம் காப்பீடு நிறுவனங்களின் பங்குகளில் 51 சதவீதத்துக்கும் குறையாமல் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் ஏற்படுகிறது.
  • மக்களவையில் பெகாசஸ் விவகார அமளிக்கு மத்தியில் எந்த விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel