Type Here to Get Search Results !

TNPSC 3rd JULY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உத்தராகண்ட் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு

  • பாஜக ஆளும் அம்மாநிலத்தில் 4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகியதையடுத்து, கடந்த மார்ச் மாதம் மக்களவை எம்.பி.யான தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். 
  • அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆளுநர் பேபி ராணி மவுரியாவை சந்தித்து தனது ராஜினாமா கடிததத்தை நேற்று முன்தினம் அளித்தார்.
  • இந்நிலையில் டேராடூனில் மத்திய பார்வையாளர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் நேற்று மாலை நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புஷ்கர் சிங் தாமி கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
  • இதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆளுநரின் அழைப்பையடுத்து தாமி பதவியேற்கிறார்

சில்லரை வர்த்தகத்துக்கு புதிய சலுகை வரலாற்று சாதனை பிரதமர் பெருமிதம்

  • `சில்லரை, மொத்த விற்பனை வர்த்தகங்களை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது வரலாற்று சாதனை,' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
  • கொரோனா தொற்று பரவலால் உலகளவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா மட்டும் விதி விலக்கல்ல. தொழில் முனைவோர்கள் தங்கள் தொழில் முதலீட்டிற்கான நிதியை திரட்டுவதில் கடும் சிக்கல் நீடித்து வருகிறது. 
  • இதனிடையே, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, `நாட்டின் சில்லரை மற்றும் மொத்த விற்பனை வர்த்தகர்களும் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருடன் இணைக்கப்படுவார்கள்.
  • ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, கடன் பெறுவதில் முக்கிய துறையின் கீழ் கொண்டு வரப்படுவதால் அவர்கள் பலன் அடைவார்கள்,' என்று தெரிவித்தார்.
காயகல்ப் விருது 2019
  • ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மேலராமநதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு கீழராமநதி, கிளாமரம், காவடிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். 
  • இந்த சுகாதார நிலையத்தில் சுத்தம் மற்றும் சுகாதார பணிகள் மிகவும் சிறப்பாக செயல்படுவதையொட்டி, மத்திய அரசின் 2019ம் ஆண்டிற்கான 'காயகல்ப்' விருது ழங்கப்பட்டுள்ளது.
நாசிக் வானொலிக்கு 2 தேசிய விருது
  • மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள விஷ்வாஸ் தியான் பிரபோதினி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் 'ரேடியோ விஷ்வாஸ் 90.8'. இது, நாள்தோறும் 14 மணி நேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது.
  • கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், 'அனைவருக்கும் கல்வி' என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
  • இதில், மூன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது. ஜில்லா பரிஷத் மற்றும் நாசிக் நகராட்சி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் சென்றடையும் விதத்தில் ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடங்கள் ஒலிபரப்பப்பட்டன.
  • இந்த நிகழ்ச்சிக்காக, ரேடியோ விஷ்வாசுக்கு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, தேசிய சமுதாய வானொலி விருதுகளின் எட்டாவது பதிப்பில் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel