Type Here to Get Search Results !

TNPSC 13th JULY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி

  • ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதில், இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இந்திய வீர்ர்கள், வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.
  • அப்போது பேசிய அவர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள உங்களுக்காக நாடு முழுவதும் மக்கள் மிகவும் எழுச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாகக் கூறினார்.
  • வீரர்களிடம் ஒழுக்கம், கட்டுப்பாடு , குறிக்கோள், அனைத்தும் உள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, உங்களின் நற்பண்புகள் புதிய இந்தியாவிற்கு வழிகாட்டும் எனத் தெரிவித்தார்.
  • பலவிதமான வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையோடு நாடு உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது எனக் கூறிய பிரதமர் மோடி, முழு மனதுடன் சிறப்பாக விளையாடுங்கள், நாடு உங்களுக்கு துணை நிற்கிறது எனக் கூறி உற்சாகமூட்டினார்.

டிஎன்பிஎஸ்சிக்கு புதிதாக 4 உறுப்பினர்கள் நியமனம்

  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) ஒரு தலைவர், 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது இதன் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி க.பாலசந்திரன் உள்ளார். பி.கிருஷ்ணகுமார், ஏ.வி.பாலுசாமி ஆகிய 2 பேர் மட்டும் உறுப்பினர்களாக உள்ளனர். 12 உறுப்பினர் பதவி காலியாக இருந்தது.
  • இந்நிலையில், தற்போது புதிதாக 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக கீழ்க்கண்ட நபர்களை தமிழக ஆளுநர் நியமித்துள்ளார். 
  • அவர்கள் விவரம்: ஐஏஎஸ் அதிகாரி எஸ்.முனியநாதன் (தற்போது தொழிலாளர் நலஆணையர்), பேராசிரியர் கே.ஜோதி சிவஞானம் (சென்னை பல்கலைக்கழக பொருளாதார துறை தலைவர்), முனைவர் கே.அருள்மதி (சென்னை), அருட்தந்தை ஏ.ராஜ் மரியசூசை (டான் போஸ்கோ,ஏற்காடு).
  • இவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்கள்.

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.4,400 கோடி அபராதம்

  • பிரான்ஸின் ஏஎஃப்பி, ஏபிக், எஸ்இபிஎம் ஆகிய செய்தி நிறுவனங்கள் கூகுள் மீது புகார் தெரிவித்தன. தங்களின் செய்திகளை கூகுள் நிறுவனம் பயன்படுத்தும் போது உரிய பணப்பலன் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
  • அதற்கான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தன. ஆனால், அதற்கு கூகுள் நிறுவனம் ஒத்துழைக்காத நிலையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கூகுள் மற்ற செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும் போது உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
  • அபராதத் தொகையை செலுத்துவது குறித்து கூகுள் இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்காவிட்டால் நாள் ஒன்றுக்கு 9 லட்சம் யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி

  • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு வங்கி) 40-ஆவது நிறுவன தினம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் காணொலி மூலமாக உரையாற்றிய போது, நபார்டு வங்கி
  • 2020-21-ஆம் ஆண்டு நிதியாண்டில், தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ரூ.27,135 கோடிகடனுதவி வழங்கியது. நடப்பு நிதியாண்டில் ரூ. 40 ஆயிரம் கோடி வழங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவுடன் கல்வி பரிமாற்றம் உயர் கல்வித்துறையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

  • தமிழ்நாடு மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு பல்கலைக் கழகங்கள் இணைந்து உயர்கல்வியில் பரிமாற்றம் செய்துகொள்ள 83 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 
  • தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். 
  • அத்துடன், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அதிகாரிகள் உடனான சந்திப்பும் நடந்தது. 

கூட்டுறவு வங்கிக்கு 'நபார்டு' விருது

  • சென்னையில், 'நபார்டு' எனப்படும், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின், 40வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. 
  • அதில், நிதி மற்றும் வளர்ச்சி முனைப்புகளில், தமிழகத்தில் சிறந்த வங்கியாக, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், டி.என்.எஸ்.சி., எனப்படும், தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
  • இந்த விருதை, தமிழக தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா வழங்க, தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் சக்திசரவணன் பெற்றார்.கடந்த, 1905ல் துவக்கப்பட்ட தலைமை கூட்டுறவு வங்கி, தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது.
  • அந்த வங்கியின் வர்த்தகம், 2020 - 21ம் நிதியாண்டில், 21 ஆயிரத்து, 600 கோடி ரூபாயில் இருந்து, 26 ஆயிரத்து, 200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் நடுவராக தகுதிபெற்ற முதல் இந்தியர் தீபக் காப்ரா
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கான நடுவராக இந்தியாவைச் சேர்ந்த தீபக் காப்ரா (33) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தகைய பெருமையைப் பெறும் முதல் இந்தியர் அவராவார்.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் வரும் 23-ஆம் தேதி முதல் நடைபெறும் ஆடவருக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் நடுவராக அவர் செயல்பட இருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel