- புதிய வகை உருமாறிய வைரசை, அது கண்டறியப்பட்ட நாட்டின் பெயருடன் சேர்த்து அழைப்பது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- கடந்த, 2019 டிசம்பரில், சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது;
- பின், பல்வேறு நாடுகளுக்கும் பரவ துவங்கியது.'கோவிட் - 19' என அழைக்கப்பட்ட இந்த தொற்றை, அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'சீன வைரஸ்' என்றே குறிப்பிட்டார்.
- இதனால், சீனா ஆத்திரமடைந்தது. இந்த தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவ துவங்கிய உடன், உருமாற்றம் அடைந்தது. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு மாற்றங்களுடன் கூடிய வைரஸ்கள்கண்டறியப்பட்டன.
- இதற்கு ஆய்வாளர்கள், தங்கள் வசதிக்காக, எண்களுடன் கூடிய அறிவியல் பெயர்களை சூட்டினர்.
- நாளடைவில், உருமாற்றம் அடைந்த வைரஸ் எந்த நாட்டில் முதன் முதலாக கண்டறியப்பட்டதோ, அந்த நாட்டின் பெயருடன் சேர்த்து, அந்த வைரசை குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது; இது, சம்பந்தப்பட்ட நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்தது.
- இந்தியாவில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட வைரஸ் வகை, பி.1.617.1 என அழைக்கப்படுகிறது. சமீபத்திய இரண்டாவது அலையின் போது கண்டறியப்பட்ட வகை, பி.1.617.2 என அழைக்கப்படுகிறது.
- இந்நிலையில் உருமாற்றம் அடையும் வைரஸ்களுக்கு, கிரேக்க மொழியிலான பெயர்களை சூட்டி, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, உலகசுகாதார நிறுவனம் முடிவு செய்தது.
- ஐரோப்பிய நாடான பிரிட்டனில் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரசுக்கு, 'ஆல்பா' என்றும், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட வைரசுக்கு, 'பீட்டா' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
- தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கண்டறியப்பட்ட, பி.1 வகை, 'காமா' என்றும், பி.2 வகை, 'ஸீடா' என்றும் அழைக்கப்படுகின்றன.அமெரிக்க வகை வைரஸ்கள், 'எப்சிலான்' மற்றும் 'லோட்டா' என அழைக்கப்படுகின்றன.
- இந்தியாவில் கண்டறியப்பட்ட, பி.1.617.1 மற்றும், பி.1.617.2 ஆகியவற்றுக்கு, 'கப்பா, டெல்டா' என பெயரிடப்பட்டுள்ளன.களங்கம்வைரஸ் குறித்து பேசும்போது, எந்த நாட்டுக்கும் களங்கம் ஏற்பட்டுவிட கூடாது என்ற காரணத்தால், பெயர் சூட்டும் முறை பின்பற்றப்படுகிறது.
- மற்றபடி, ஆராய்ச்சி பணிகளுக்கு, வைரசின் அறிவியல் பூர்வமான பெயர்களே தொடர்ந்து பயன்படுத்தப்படும். பொது விவாதங்கள் மற்றும் செய்திகளில் குறிப்பிடும் போது, இந்த புதிய பெயர்களை சொல்லி அழைப்பதே சிறந்தது.