நேபாள பிரதமராக சா்மா ஓலி மீண்டும் பிரதமராக பதவியேற்பு
- சா்மா ஓலி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் தலைவா் புஷ்பகமல் தாஹால் பிரசண்டா திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து அரசு பெரும்பான்மை இழந்தது. அதையடுத்து, சா்மா ஓலி பதவி விலகினாா்.
- இந்த நிலையில், வியாழக்கிழமை இரவுக்குள் புதிய அரசை அமைக்குமாறு எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ், பிரசண்டாவின் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிகளுக்கு அதிபா் வித்யாதேவி பண்டாரி அழைப்பு விடுத்திருந்தாா். குறித்த நேரத்துக்குள் ஆட்சிமைக்க இரு கட்சிகளும் தவறின.
- அதையடுத்து, சா்மா ஓலியை மீண்டும் பிரதமராக அதிபா் நியமித்தாா். அதன் தொடா்ச்சியாக, நேபாளத்தின் 43-ஆவது பிரதமராக சா்மா ஓலி வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அவருடன் அவரது அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.
- எனினும் 30 நாள்களுக்குள் நாடாளுமன்றத்தில் அவா் தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும்.
பிக்காசோவின் ஓவியம் ரூ.750 கோடிக்கு ஏலம்
- ஜன்னலில் பெண் அமர்ந்திருக்கும் வகையில் இவர் 1932ம் ஆண்டு ஓவியம் ஒன்றை வரைந்து நிறைவு செய்தார். இந்த ஓவியம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் ஏலமிடப்பட்டது.
- ரூ.403 கோடிக்கு ஏலம்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19 நிமிடங்கள் நடந்த ஏலத்தில் ஓவியமானது ரூ.750 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி வஉசி துறைமுகம் 2020 - 2021ம் நிதியாண்டில் ரூ.113.72 கோடி வருவாய் ஈட்டி சாதனை
- தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த நிதியாண்டில் (2020- 2021) 31.79 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது 2019-2020 நிதியாண்டில் கையாளப்பட்ட 36.08 மில்லியன் டன் சரக்குகளை விட 11.89 சதவிகிதம் குறைவாகும்.
- இதில் இறக்குமதி 22.53 மில்லியன் டன்களும் (70.86 சதவீதம்), ஏற்றுமதி 9.18 மில்லியன் டன்களும் (28.90 சதவீதம்), சரக்கு பரிமாற்றம் 0.08 மில்லியன் டன்களும் (0.24 சதவீதம்) கையாளப்பட்டுள்ளது.
- 2020-2021 நிதியாண்டில் மொத்தம் 7.62 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய நிதியாண்டு கையாண்ட அளவான 8.04 சரக்கு பெட்டகங்களுடன் ஒப்பிடுகையில் 5.22 சதவீதம் குறைவாகும்.
- வஉசி துறைமுகத்தில் 2020-2021-ம் நிதியாண்டு இயக்க வருவாய் ரூ.549.51 கோடி ஆகும். முந்தைய 2019-2020 நிதியாண்டு இயக்க வருவாய் ரூ.582.90 கோடியாக இருந்தது.
- 2020-2021 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூ.322.63 கோடி ஆகும். முந்தைய 2019-2020 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூ.328.71 கோடியாக இருந்தது.
- 2020-2021 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.113.72 கோடி ஆகும். முந்தைய 2019-2020 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.135.23 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டைவிட நிகர வருவாய் ரூ.21.51 கோடி குறைந்துள்ளது.
- வஉசி துறைமுகத்தில் ரூ.64.15 கோடி செலவில் வடக்கு சரக்குத் தளம்-3-ஐ 14.20 மீட்டராக ஆழப்படுத்தும் பணி தொடங்கப்படும் நிலையில் உள்ளது.
- மேலும் 49 மீட்டர் அகலமும் மற்றும் 366 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய வகை கப்பல்கள் வருவதற்கு வசதியாக துறைமுக நுழைவுவாயிலை 152.40 மீட்டரிலிருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி ரூ.15.24 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
- எளிமையான வர்த்தகம் நடைபெறுவதற்கு வசதியாக ஒரு மணி நேரத்தில் 100 சரக்கு பெட்டக வாகனங்களை ஸ்கேன் செய்யும் வசதி ரூ.47 கோடி செலவில் நிறுவும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.