பிஎம் கேர்ஸ் நிதியில் அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க உத்தரவு
- கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அவதியுறும் நிலையில் அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
- இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கல் பாதிக்கப்படுகிறார்கள். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர்.
- இதையடுத்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யவும் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் பிஎம் கேர்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளில் புதிதாக 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
- இதற்காக பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து கணிசமான நிதியை ஒதுக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- துணை அட்டர்னி ஜெனரலாக, இந்திய அமெரிக்காவின் வம்சாவளியைச் சேர்ந்த, "மனித உரிமை வழக்குரைஞராக'' பணியாற்றி வரும் வனிதா குப்தா நியமிக்கப்பட்டதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
- அமெரிக்க நீதித் துறையின் மூன்றாவது பெரிய பதவியான அது, வெள்ளையரல்லாத ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
- இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வனிதா குப்தாவுக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் பதிவாகின.