Type Here to Get Search Results !

TNPSC 25th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பிஎம் கேர்ஸ் நிதியில் அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க உத்தரவு

  • கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அவதியுறும் நிலையில் அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
  • இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கல் பாதிக்கப்படுகிறார்கள். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர்.
  • இதையடுத்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யவும் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் பிஎம் கேர்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளில் புதிதாக 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
  • இதற்காக பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து கணிசமான நிதியை ஒதுக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
அமெரிக்க நீதித் துறை முக்கிய பொறுப்பில் இந்திய அமெரிக்கர் 
  • துணை அட்டர்னி ஜெனரலாக, இந்திய அமெரிக்காவின் வம்சாவளியைச் சேர்ந்த, "மனித உரிமை வழக்குரைஞராக'' பணியாற்றி வரும் வனிதா குப்தா நியமிக்கப்பட்டதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. 
  • அமெரிக்க நீதித் துறையின் மூன்றாவது பெரிய பதவியான அது, வெள்ளையரல்லாத ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். 
  • இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வனிதா குப்தாவுக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் பதிவாகின.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel