- பழங்குடியின பிாிவுனருக்கான தேசிய ஆணையம் (என்சிஎஸ்டி) ஒரு இந்திய அரசியலமைப்பு சாா்ந்த அமைப்பாகும். இந்த அமைப்பானது, இந்திய அரசியலமைப்பின் 89 வது திருத்த சட்டத்தின் மூலம் 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- அரசியலமைப்பு (89 வது திருத்தம்) சட்டம், 2003 மூலம் அரசியலமைப்பில் 338 ஏ பிரிவை திருத்தி, புதிய பிரிவு 338 ஏ ஐ செருகுவதன் மூலம் தேசிய பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (என்சிஎஸ்டி) நிறுவப்பட்டது.
- இந்த திருத்தத்தின் மூலம், முந்தைய பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (i) பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம் (என்.சி.எஸ்.சி), மற்றும் (ii) பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் (என்.சி.எஸ்.டி) 19 பிப்ரவரி, 2004.
வரலாறு
- அரசியலமைப்பின் 89 வது திருத்தத்தின் படி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது 19 பிப்ரவரி 2004 இல் நடைமுறைக்கு வந்தது. பழங்குடியின பிாிவுனருக்கான தேசிய ஆணையமானது இந்திய அரசியலமைப்பின் சரத்து 338 அ இன் படி உருவாக்கப்பட்டது.
- இந்திய அரசியலமைப்பில் பழங்குடி மக்களுக்கு வழங்கியுள்ள பாதுகாப்புகளை நடைமுறைப்படுத்துவதே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிாிவுனருக்கான தேசிய ஆணையங்களின் பொறுப்பாகும்.
- இந்த திருத்தத்தின் படி, முன்னா் அமைப்பப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிாிவுனருக்கான தேசிய ஆணையம் மாற்றப்பட்டு தற்போது இரண்டு ஆணையங்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டது.
- அவைகள் ஒன்று தாழ்த்தப்பட்ட பிாிவுனருக்கான தேசிய ஆணையம் மற்றொன்று பழங்குடியின பிாிவுனருக்கான தேசிய ஆணையம் ஆகும்.
- இதன் முதல் ஆணையம் 2004 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போது தலைவராக குன்வர் சிங் தலைவராக இருந்தார்.
- இதன் இரண்டாவது ஆணையம் 2007 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போது தலைவராக உாிமிலா சிங் தலைவராக இருந்தார்.
- இதன் மூன்றாவது ஆணையம் 2010 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போது தலைவராக இராமேஷ்வர் ஓரான் இருந்தார்.
- இதன் நான்காம் ஆணையம் 2013 நவம்பரில் நியமிக்கப்பட்ட போது, ராமேஷ்வர் ஓரான் தலைவர் பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார்.
- நான்காவது ஆணையத்தின் துணைத் தலைவராக இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தை சோ்ந்த எம்.எல்.ஏ ஸ்ரீ.ரவி தாமூதாகூா் நியமிக்கப்பட்டாா்.
குழு
- இந்த ஆணையத்தில் தலைவா், துணைத் தலைவா் மற்றும் மூன்று முழு நேர உறுப்பினா்களை (இதில் ஒருவா் பெண் உறுப்பினா்) உள்ளடக்கியது.
- இதன் அனைத்து உறுப்பினா்களின் பதவிக் காலம் பதவியேற்றதிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும்.
செயற்பாடுகள்
- அரசியலமைப்பின் படி பழங்குடியினரை பாதுகாக்க வழங்கப்பட்ட பாதுகாப்பு அல்லது சட்டங்கள் மற்றும் அரசாங்கம் அவா்களை பாதுகாக்க வெளியிடும் உத்தரவுகள் ஆகியவற்றை விசாரணை செய்யவதும் மற்றும் கண்காணித்து மேற்பாா்வை செய்வது இதன் பணியாகும்.
- பழங்குடியினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட புகார்களை விசாரிக்கவும் உரிமைகள் இழப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது
- மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதி மற்றும் எந்தவொரு மாநிலத்திலும் பழங்குடியினரின் சமூக-பொருளாதார வளா்ச்சிக்காக திட்டமிடல் செயற்பாடுகளில் பங்கேற்பது மற்றும் ஆலோசனை வழங்குவதும்
- பழங்குடியினாின் பாதுகாப்பு சாா்நத அறிக்கைகளை ஆண்டுதோறும் மற்றம் வேறு சில சமயங்களிலும் குடியரசு தலைவருக்கு சமா்பிக்க வேண்டும்.
- இத்தகைய அறிக்கையில், மத்திய அரசு அல்லது எந்தவொரு மாநிலமும் பழங்குடியினாின் பாதுகாப்புத் திட்டங்கள், நலவாழ்வு மற்றும் அவா்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான பாதுகாப்பு மற்றும் ஏனைய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளையும்அளிப்பது.
- குடியரசு தலைவா் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட பழங்கடி மக்களின் பங்பாதுகாப்பு, நலன் மற்றும் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு தொடர்புடைய பிற செயல்பாடுகளை பாதுகாப்பது.
ஆணையத்தின்
அதிகாரங்கள் (பிரிவு 338 ஏ இன் பிரிவு (8) இன் கீழ்)
- விசாரணை மற்றும் விசாரணைக்கு, ஆணைக்குழு அதிகாரம் கொண்ட ஒரு சிவில் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கொண்டுள்ளது:
- எந்தவொரு நபரின் வருகையையும் வரவழைத்து, சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளுங்கள்;
- எந்த ஆவணங்களின் கண்டுபிடிப்பு & உற்பத்தி;
- பிரமாண பத்திரங்களில் ஆதாரங்களைப் பெறுங்கள்;
- எந்தவொரு நீதிமன்றத்திலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ எந்தவொரு பொது பதிவையும் அல்லது அதன் நகலையும் கோருதல்;
- சாட்சிகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்கான கமிஷன்களை வழங்குதல்; மற்றும்
- எந்தவொரு விஷயமும் ஜனாதிபதி, விதிப்படி தீர்மானிக்கலாம்.