உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் பதக்கப் பட்டியல் 2020
- ஜொமனியில் கொலோன் நகரில் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த போட்டியில், கடைசி நாளில் மகளிருக்கான 60 கிலோ பிரிவில் சிம்ரன்ஜீத் கௌரும், 57 கிலோ பிரிவில் மணீஷ் மௌனும் தங்கப் பதக்கம் வென்றனா். இதில் சிம்ரன்ஜீத் இறுதிச்சுற்றில் ஜொமனியின் மாயா கிளியென்ஹஸை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினாா்.
- மணீஷ் மௌன் தனது இறுதிச்சுற்றில் மற்றொரு இந்திய வீராங்கனையான சாக்ஷி சௌதரியை 3-2 என்ற கணக்கில் வென்றாா்.
- இதையடுத்து பதக்கப்பட்டியலில் இந்தியா மொத்தமாக 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது.
- போட்டியை நடத்திய ஜொமனி 4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தது. பிரான்ஸ் 3 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் 3-ஆம் இடம் பிடித்தது.
- முன்னதாக இப்போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் (52 கிலோ) தங்கம் வென்றிருந்தாா். சதீஷ் குமாா் (+91 கிலோ) காயம் காரணமாக இறுதிச்சுற்றிலிருந்து பாதியில் வெளியேறி வெள்ளியைப் பெற்றிருந்தாா்.
- சோனியா லேதா் (57 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), கௌரவ் சோலங்கி (57 கிலோ), முகமது ஹசாமுதீன் (57 கிலோ) ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனா்.
- இப்போட்டியில் இந்தியாவுடன், ஜொமனி, பெல்ஜியம், குரோஷியா, டென்மாா்க், பிரான்ஸ், மால்டோவா, நெதா்லாந்து, போலாந்து, உக்ரைன் நாடுகளின் போட்டியாளா்கள் பங்கேற்றிருந்தனா்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதி
- எளிதாக தொழில் துவங்குவதற்காக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு, கூடுதலாக கடன் பெற அனுமதி அளிக்கப்படும்' என, மத்திய அரசு, கடந்த மே மாதம் அறிவித்தது.
- இந்நிலையில், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும், மாவட்ட அளவிலான வர்த்தக சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இதையடுத்து, இம்மாநிலங்கள் கூடுதல் கடன் பெற, மத்திய நிதி அமைச்சகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.
- தொழில், வர்த்தகம் தொடங்குவதற்கான பதிவுச் சான்று பெறுதல், சான்றுகளைப் புதுப்பித்தல், அங்கீகாரம் வழங்குதல், ஒப்புதல் அளித்தல் போன்றவற்றுக்கான தேவைகளை நீக்குவது, இந்தச் சீரமைப்பின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
- கொரோனா வைரஸ் பரவலால், பாதிக்கப்பட்டுள்ள மாநில அரசுகளின் கூடுதல் நிதித் தேவையை நிறைவு செய்ய, கடந்த மே மாதம் முடிவு செய்யப்பட்டது.
- இதன்படி, மாநில அரசு கள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2 சதவீதம், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மையில், 3 சதவீதம் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டது.
- ஆனால், அதற்கு மாநில அரசுகள், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு, எளிதாக வர்த்தகம் செய்யும் சீரமைப்பு விதிகள், நகர உள்ளாட்சி சீர்திருத்தம், மின்துறை சீர்திருத்தத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும் என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
- இதுவரை, 10 மாநிலங்கள், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தையும், ஐந்து மாநிலங்கள் எளிதாகத் தொழில் செய்யும் சீரமைப்பு விதிகளையும், இரண்டு மாநில அரசுகள், உள்ளாட்சி சீர்திருத்தங்களையும் முழுமையாக செய்து முடித்துள்ளன.
- எளிதாக வர்த்தகம் செய்வதற்கான சீரமைப்பு விதிகளை, தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநில அரசுகளும், முழுமையாக செயல்படுத்தி உள்ளன.
- இந்த ஐந்து மாநில அரசுகளும், வெளிச்சந்தையில் கூடுதலாக, 16 ஆயிரத்து, 728 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
ஜெருசலேம் உதவித்தொகை அதிகரிப்பு முதல்வர் அறிவிப்பு
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெருசலேம் செல்ல விரும்புவர்களுக்கு அரசு வழங்கி வரும் மானியம் ரூ.20,000 இருந்து ரூ.37000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
- முஸ்லிம்கள் ஹஜ்ஜுக்குப் புனித யாத்திரை செல்வதைப்போல கிறிஸ்தவர்களும் ஜெருசலேமுக்குச் செல்கின்றனர். இந்த புனிதத் தலங்களுக்குச் செல்ல அதிகச் செலவாகும் என்பதால் ஹஜ் யாத்திரைக்குச் செல்ல உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கும் தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.